ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பா.ஜ.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்

1 Min Read

பாட்னா, ஏப்.22 பாஜக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெகபூப் அலி கெய்சர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் களில் பீகார் மாநிலத்தில் ககாரியா தொகு தியில் பா.ஜனதா கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் நாடா ளுமன்ற உறுப்பினர். ஆனவர் மெகபூப் அலி கெய்சர். இவர் பீகாரில் பா.ஜனதா கூட்டணியின் ஒரே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

லோக் ஜனசக்தி கட்சி பிளவடைந்தபோது, மேனாள் ஒன்றிய அமைச்சர் பசுபதிகுமார் பராஸ் பக்கம் மெகபூப் அலி கெய்சர் சாய்ந்தார். ஆகவே தற்போதைய நாடாளு மன்றத் தேர்தலில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.

அதிருப்தியில் இருந்த மெகபூப் அலி கெய்சர், நேற்று (21.4.2024) ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கட்சியின் நிறுவனர் லாலுபிரசாத் யாதவை சந்தித்தார். இன்னும் ஒரு தொகுதிக்கு மட்டும் ராஷ்டிரீய ஜனதாதளம் வேட் பாளரை அறிவிக்கவில்லை என்பதால் அங்கு கெய்சருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *