கொல்கத்தா,ஏப்.22- இந்த மக் களவை தேர்தல் நாட்டின் இரண் டாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சரும் மற்றும் எதிர்க்கட்சிகளின் இந் தியா கூட்டணியின் குறிப்பிடத் தக்க உறுப்பினருமான, மம்தா, பா.ஜ.க.வை கடுமையாக சாடினார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடை பெறுகிறது. முதல்கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங் களைச் சேர்ந்த102 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் பல்வேறு மாநிலங்களில் நடை பெற உள்ளன.
இதையொட்டி, வேட்பாளர் கள் அறிமுகம்,வேட்பு மனுத் தாக்கல், தேர்தல் பிரச்சாரம் என அரசியல் கட்சியினர் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சி சார்பில் போட்டியிடும், யூசுப் பதான், அபுதாஹிர் கான் ஆகி யோரை அறிமுகம் செய்து, மம்தா வாக்கு சேகரித்தார். அப்போது, தற்போதைய மக்களவைத் தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.
மேற்குவங்க மாநிலம் முர்ஷி தாபாத் மாவட்டத்தின் ஹரிஹர் பரா பகுதியில் நடைபெற்ற கட் சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில் பேசிய மம்தா, மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். எனவே, தற்போதைய மக்களவைத் தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும்.
நமது மாநிலத்தின் கூச்பிகார் தொகுதியில் மாநில காவல்துறையினரை விலக்கிவிட்டு, ஒன்றியப் படையினரை மட்டும் தேர்தல் ஆணையம் நிலைநிறுத்தியுள்ளது.
இதன் மூலம் பாஜக வேட்பா ளரும் ஒன்றிய அமைச்சருமான நிஷித் பிரமாணிக் பலனடைய வேண்டுமென்ற அக்கட்சியின் அழுத்தத்துக்கு தேர்தல் ஆணை யம் அடிபணிந்துவிட்டது.
பா.ஜ.க.வின் ஆணையம் போல தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது. பாஜகவின் தொண்டர்கள் போல ஒன்றியப் படையினர் பயன்படுத்தப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், தேர் தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியுமா? என பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
ஒன்றிய பா.ஜ.க., எதிர்க் கட்சிகளை நசுக்கி, அதன் மூலம் தன்னை நிலைநாட்டுவதில் நம் பிக்கை கொண்டுள்ளது. தேர்தல் ஆதாயத்துக்காக மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது.
பொது சிவில் சட்டத்தை அம லாக்குவது அக்கட்சியின் நோக்கம். இதன் மூலம் தங்களது சொந்த மதம், கலாச்சாரம், சடங்குகள் மீதான மக்களின் உரிமைகள் பறி போகும்.
விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், நேஜாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தியார், அபுல் கலாம் ஆசாத் ஆகிய தலைவர்களால் ஏற் றுக் கொள்ளப்பட்ட மாண்புகள்-கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்றுள்ள பா.ஜ.க., தாழ்த்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு துரோகம் இழைக்கிறது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை, பா.ஜ.க.வால் திட்டமிட்டு நிகழ்த் தப்பட்டதாகும்.
ரத்தக் களறி, வன்முறையில் தான் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது.
மாநிலத்தில் வன்முறையை அக் கட்சி தூண்டுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறி, ராமநவமி ஊர் வலங்களில் ஆயுதங்களுடன் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றது ஏன்? அதற்கு யார் அனுமதி கொடுத்தனர்? என்று கேள்வி எழுப்பினார்.