ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் சரத் ரெட்டி பா.ஜனதாவுக்கு கொடுத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப்.22- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்பட கட்சியினர் பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ஆம் ஆத்மி கட்சி, இந்த வழக்கில் கெஜ்ரிவால் உள்ளிட் டோருக்கு எதிராக எந்த ஆதார மும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறி வருகிறது.

அதேநேரம் இந்த வழக்கில் சிக்கிய பல தொழிலதிபர்களிடம் இருந்து பா.ஜனதா பணம் பெற்றி ருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது. அந்த வகையில் சரத் ரெட்டி என்பவரிடம் இருந்து ரூ.60 கோடி பெற்றிருப்பதாக ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, நான் (சஞ்சய் சிங்) உள்பட ஆம் ஆத்மி தலை வர்கள் பலரும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டோம்.

இந்த வழக்கில் முக்கிய குற்ற வாளி என அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருக்கும் சரத் ரெட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதாவுக்கு ரூ.60 கோடி கொடுத்து இருக்கிறார். அதாவது சரத் ரெட்டி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரூ.5 கோடியை 2022ஆ-ம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி கொடுத்து இருக்கிறார். 6 மாத சிறைவாசத்துக் குப்பின் 2023ஆ-ம் ஆண்டு மே 8ஆம் தேதி அவர் பிணையில் விடுதலை ஆனார்.

அடுத்த சில நாள்களில் அவர் ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங் கள் மூலம் பா.ஜனதாவுக்கு கொடுத் திருக்கிறார். முன்னதாக கைது நடவடிக்கைக்கு முன்னரும் ரூ.5 கோடி கொடுத்திருக்கிறார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக யார் மீதும் அமலாக் கத்துறையினர் நடவடிக்கை எடுக் கவில்லை. கடந்த மார்ச் 21ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் தொடர் பான விவகாரங்கள் வெளியான போது இந்த தகவல்கள் அம்பல மாகி இருந்தன” என்று சஞ்சய் சிங் கூறினார். ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டு டில்லி அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *