மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப் பதிவு

viduthalai
3 Min Read

இம்பால்,ஏப்22- மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு களுக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் இன்று (ஏப்.22) காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தி னருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடி யினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது.

இந்தக் கலவரத்தில் 210-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தில் அமைதி இன்னும் முழுமையாக திரும்பவில்லை.
இந்நிலையில், மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும், வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 தொகுதிகளிலும் கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.18 சதவீதம் வாக்குப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அன்றைய நாள் கிழக்கு இம்பால் மாவட்டத்திலும், விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள தமன் போக்கி பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதனால் அங்கே 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு இம்பால் மற்றும் கிழக்கு இம்பால் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஏப்ரல் 22ஆம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களிக்க வந்த நபர் ஒருவர், “கடந்த 19 ஆம் தேதி வன்முறையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

இன்று மறுவாக்குப்பதிவில் வாக்களிக்க வந்துள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது” என்றார்.மணிப் பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன்
4ஆம் தேதி நடைபெறுகிறது.

கடவுள் சக்தி எங்கே?

சென்னை தியாகராயர் நகரில் உள்ள கோவிலில் ‘கடவுளர்’ சிலையில் இருந்த 20 பவுன் நகை திருட்டு

சென்னை, ஏப்.22- சென்னை தியாகராயர் நகர் விஜயராகவா சாலையில் ஹயக்ரீவர் கோவிலில் ‘கடவுளர்’ சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க மாலை கடந்த 19.4.2024 அன்ற காணாமல் போய்விட்டதாம்.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த கோவிலின் அறக்கட் டளை மேலாளர் மதுசூதன் பட், கோவிலில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் கடந்த 14ஆம் தேதி கோவிலுக்கு புது ஊழியராக பணி யில் சேர்ந்த சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த தினகர் திரிபாதி (வயது 25), ‘கடவுளர்’ சிலையில் இருந்த தங்க மாலையை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக மதுசூதன் பட், சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையுடன் தப்பியோடிய தினகர் திரிபாதியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

12 முதல் 17 சதவீதம் வரை நெகிழி உற்பத்தியை குறைத்தால்
காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்கலாம்!
அமெரிக்க ஆய்வில் தகவல்

புதுடில்லி,ஏப்.22- அமெரிக்காவை சேர்ந்த லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகமானது கார்பன் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட் டுள்ளது. இதன்படி தற்போதைய (பிளாஸ்டிக்) உற்பத்தி சத வீதமானது காலநிலை மாற்றத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. நெகிழி உற்பத்தியின்போது பயன்படுத்தப்படும் எரிபொருளை எரிப்பதன் மூலமும், அப்போது வெளிப்படும் வெப்பம் மூலமும் வெளியேறும் வாயுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இந்த உமிழ்வுகளில் சுமார் 75 சதவீதம் நெகிழி உருவாகாத முன்பே நிகழ்கிறது. எரிபொருட்களை எரிப்பது வளிமண்ட லத்தில் க்ரீன் ஹவுஸ் வாயுக்களின் அளவு அதிகரிப்பதற்கு முதன்மை காரணமாகும். இது உலக வெப்பநிலையை உயர்த்துகிறது. காலநிலை மாற்றத்தில் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான பாரிஸ் உடன் படிக்கையால் நிர்ணயிக்கப்பட்ட 1.5டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை வரம்பை மீறுவதை தவிர்ப்பதற்கு 2024ஆம் ஆண்டு தொடங்கி நெகிழி உற்பத்தியானது ஆண்டுக்கு 12 முதல் 17 சதவீதம் வரை குறைய வேண்டும். இல்லையென்றால் 1.5டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பை அடைவது தாமதமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *