“பா.ஜ.க.வின் ‘400 இடங்கள்’ என்ற படம் முதல் நாளே தோல்வி” தேஜஸ்வி யாதவ் விமர்சனம்!

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப்.21 – 400 இடங்கள் என்று பா.ஜ.க. காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப் பதிவின் போதே தோல்வி அடைந்து விட்டது என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில மேனாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
பீகாரில் ஜமுய், நவாடா, கயா மற்றும் அவுரங்காபாத் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 48.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது.
இந்நிலையில், இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள தாவது, “எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்தினோம். நல்ல கருத்துகள் வந்துள்ளன.
400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே சூப்பர் ஃப்ளாப் ஆகியுள்ளது. பீகார் மக்கள் இந்த முறை அதிர்ச்சி தரும் முடிவுகளைத் தருவார்கள். பீகார் மக்களுக்கு பாஜக எதுவும் செய்யவில்லை.
2014, 2019இல் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை. இப்போது பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளால் பொதுமக்கள் சோர்வடைந் துள்ளனர்.
பீகாரில் வேலையில்லா திண்டாட்டம் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த முறை பா.ஜ.க.வினர் மிகவும் கவலையடைந்துள்ளனர். அரசியல் சட்டத்தை ஒழிப்போம் என்கிறார்கள். அரசமைப்பை அழிப்பவர்கள் தாங்களாகவே அழிக்கப்படுவார்கள்” என்றார்.
‘நாட்டுக்காக வாக்களித்து என் கடமையாற்றினேன்’

உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த குள்ளமான பெண் பெருமிதம்!

நாக்பூர், ஏப்.21- மகாராட்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ஜோதி ஆம்ஜி. ‘‘பிரிமார் டையல் டுவார்ப் பிஸம்’’ என்று அரிய மரபணு பாதிப்பால் வளர்ச்சி குன்றினார்.
இவரது உயரம் 62.8 செ.மீ. (2 அடி, முக்கால் அங்குலம்). கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இவர் தனது 18ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்தியா
அப்போதுதான் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டார். அதன் மூலம் உலகளவில் மிகவும் புகழ்பெற்றார்.
தற்போது 30 வயதாகும் ஜோதி ஆம்ஜி, இந்தியா மற்றும் ஹாலிவுட் திரைப் படங்களில் பணியாற்றி வருகிறார்.
அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இந்நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு நாக்பூரில் தனது வீட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் ஜோதி வாக்களித்தார்.

வாக்குச்சாவடியிலிருந்து வெளியேற்றப்பட்ட காவி முண்டாசு

சங்கிகள் எல்லா இடத்திலும் மெல்ல மெல்ல ஊடுருவி இருக்கிறார்கள். மதுரையில் வார்டு 55 சேதுபதி பள்ளி வாக்குச்சாவடியில் காவி நிற முண்டாசு கட்டிக் கொண்டு தேர்தல் பணி செய்த அரசு அலுவலரால் சர்ச்சை எழுந்தது.
வாக்குச்சாவடி முகவர்கள் எழுப்பிய கடும் எதிர்ப்பை அடுத்து அந்த அலுவலர் வாக்குச் சாவடி மய்யத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு, சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த் துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *