திருவனந்தபுரம், ஏப். 21- 18ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு 19.4.2024 அன்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.
முதற்கட்ட தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை வாக்காளர்கள் நிராகரித்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி யுள்ளார். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரியங்கா காந்தி, “தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தேர்தலில் காங்கிரசும், இந்தியா கூட்டணியும் நிராகரிக்கப்பட்டதாக பிரதமர் கூறுகிறார்.
முடிவுகள் வெளியாகாதபோது அவருக்கு இது எப்படி தெரியும்.? மேலும் இந்த முறை 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று பிரதமரும், பா.ஜனதாவும் எப்படி கூற முடியும்.?” என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அவர், “முடிவுகள் வராத நிலையில் அவர்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்கிறோம். எங்கு சென்றாலும் மாற்றத்தை விரும்பும் மக்களை பார்க்கிறேன். மாற்றம் வரும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
அதன் பின்னர், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி “இன்னும் சில நாட்களில் அதை பார்க்கலாம்” என்றார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்
சென்னை, ஏப். 21- தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு 19.4.2024 அன்று நடந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இவ்வாறு விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் அப்போதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.
எனவே 6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து, 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டனர். இதையடுத்து 19.4.2024 அன்று இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதத்தை பார்க்கலாம்:
திருவள்ளூர் – 68.31 சதவிகிதம்
வட சென்னை – 60.13 சதவிகிதம்
தென் சென்னை – 54.27 சதவிகிதம்
மத்திய சென்னை – 53.91 சதவிகிதம்
சிறீபெரும்புதூர் – 60.21 சதவிகிதம்
காஞ்சிபுரம் – 71.55 சதவிகிதம்
அரக்கோணம் – 74.08 சதவிகிதம்
வேலூர் – 73.42 சதவிகிதம்
கிருஷ்ணகிரி – 71.31 சதவிகிதம்
தருமபுரி – 81.48 சதவிகிதம்
திருவண்ணாமலை – 73.88 சதவிகிதம்
ஆரணி – 75.65 சதவிகிதம்
விழுப்புரம்- 76.47 சதவிகிதம்
கள்ளக்குறிச்சி – 79.25 சதவிகிதம்
சேலம்- 78.13 சதவிகிதம்
நாமக்கல் – 78.16 சதவிகிதம்
ஈரோடு – 70.54 சதவிகிதம்
திருப்பூர் – 70.58 சதவிகிதம்
நீலகிரி – 70.93 சதவிகிதம்
கோவை – 64.81 சதவிகிதம்
பொள்ளாச்சி -70.70 சதவிகிதம்
திண்டுக்கல் – 70.99 சதவிகிதம்
கரூர்- 78.61 சதவிகிதம்
திருச்சி -67.45 சதவிகிதம்
பெரம்பலூர் – 77.37 சதவிகிதம்
கடலூர் – 72.28 சதவிகிதம்
சிதம்பரம் – 75.32 சதவிகிதம்
மயிலாடுதுறை – 70.06 சதவிகிதம்
நாகப்பட்டினம் – 71.55 சதவிகிதம்
தஞ்சாவூர்- 69.18 சதவிகிதம்
சிவகங்கை – 63.94 சதவிகிதம்
மதுரை – 61.92 சதவிகிதம்
தேனி – 69.87 சதவிகிதம்
விருதுநகர் -70.17 சதவிகிதம்
ராமநாதபுரம் -68.18 சதவிகிதம்
தூத்துக்குடி – 59.96 சதவிகிதம்
தென்காசி – 67.55 சதவிகிதம்
திருநெல்வேலி – 64.10 சதவிகிதம்
கன்னியாகுமரி – 65.46 சதவிகிதம்