புதுடில்லி, ஏப். 21- பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந் தால் உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்த தேர்தல் பத் திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத் தால் வல்லுநர்களுடன் முறையான ஆலோச னைக்கு பிறகு, தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வரு வோம். அரசமைப்புக்கு எதிரானது என்று தேர் தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்சநீதிமன் றத்தின் தீர்ப்பை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன் னும் முடிவு செய்யப்பட வில்லை. தேர்தல் பத்தி ரங்கள் வெளிப்படைத் தன்மை நிறைந்தது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவ தற்கான சாத்தியக்கூறு களை ஆய்வு செய்வோம்” என்றார்.
முன்னதாக, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப் படும் ரொக்க நன்கொ டைகளுக்கு மாற்றாகவும், அரசியல் நிதியில் வெளிப் படைத்தன்மையை கொண்டு வருவதற்காக வும், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ஒன்றிய அரசு 2.1.2018 அன்று அறிமுகப்படுத்தியது. ஆனால், பிப்ரவரி 2024 இ-ல், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஒன்றிய அரசின் தேர்தல் பத்திர திட்டத்தை அரச மைப்புக்கு விரோதமா னது என்று அறிவித்து அதனை ரத்து செய்தது. அத்துடன் நன்கொடை யாளர்கள் பெயர், கட்சி கள் பெற்ற தொகை விவ ரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட் டது.
அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங் கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.