14 ஆண்டுகளுக்குமுன்! – மின்சாரம்

viduthalai
2 Min Read

இன்றைக்கு 14 ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வு இது!
கருநாடக மாநிலம் பசவனக்குடி கல்லூரி மாணவர்கள் மத்தியிலே காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள், மாணவர்களின் கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையே!

இதுகுறித்து (‘டெக்கான் ஹெரால்டு’ 15.8.2010) விளக்க மாகவே தெரிவிக்கிறது.
இந்திய மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந் தவை ஒன்று சமூகநீதி – இட ஒதுக்கீடு. இதுகுறித்து சூடான வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளன.
எடுத்த எடுப்பிலேயே ஓர் உண்மையை வெடி குண்டெனத் தூக்கிப் போட்டார் ராகுல். இட ஒதுக் கீடுக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்கள் அல்லர் என்றார்.

பயிற்றுவிக்கும் திசையில் வளர்ச்சி ஏற்பட செய் யப்பட வேண்டியது என்ன? என்ற வினாவை ராகுல் தொடுத்த நேரத்தில், ஒரு மாணவி எழுந்திருந்து, ‘‘முதலில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைத் தடுத்து நிறுத்துங்கள்” என்று அக்னித் துண்டை வீசினார்.

இட ஒதுக்கீடு பேரால் தகுதி திறமை வாய்ந்தவர் களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. திறமை வாய்ந்த மாணவர்கள் விரக்தியடைந்துள்ளனர் என்றும் அந்த மாணவி மேலும் கூறினார். மிகவும் அமைதியாக ராகுல் விடையளித்தார். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந் திருக்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் நாட்டில் :எத்தனை விழுக்காடு என்று உங்களுக்குத் தெரியுமா? கிட்டத்தட்ட அவர்கள் 70 விழுக்காடு ஆவார்கள்.

இந்த அரங்கத்திற்குள்ளே கூடியிருக்கும் உங்களில் எத்தனைப் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் – பிற்படுத்தப்பட்ட வர்கள்? கொஞ்சம் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்டார். கை தூக்கியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. அடுத்து பொதுத் தொகுதியில் (Open Competition) போட்டியிடக் கூடியவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்றார். பெரும்பாலோர் கைகளை உயர்த்தினர்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நறுக்கென்று தைப்பதுபோல மண்டையில் ஓர் அடி அடித்தார் ராகுல் காந்தி. இட ஒதுக்கீடு தேவையின் அவசியத்தை நீங்கள் உயர்த்திய கரங்களே – எண்ணிக்கைப் பலமே நிரூபித்துவிட்டன என்றார்.

இன்னொரு மாணவி எழுந்தார், ‘‘ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு அளிப்பதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை தகுதி உடையவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்யக்கூடாதா?” என்று வினாவைத் தூக்கி எறிந்தார்.
அதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டுத் தான் வருகின்றன என்று பதில் அளித்தார்.

சமூகநீதி, இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஓர் இளைஞரின் கருத்து எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூகநீதிச் சிந்தனையாளர்களிடம் இருக்கவே செய்தது. அவர்களின் நெஞ்சில் எல்லாம் பால் வார்க்கும் வகையில் ராகுல் காந்தியின் கருத்து இருப்பது நன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலும் உயர்ஜாதியினர் சூழ்ந்த அரங் கில், அவர் கேள்விகளை எதிர்கொண்ட விதம் பெருமிதமாக இருந்தது. அந்த இடத்திலேயே உயர்ஜாதிக்காரர்கள் எப்படி எல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை ஒரு சோதனை வைத்து நிரூபித்தது – அவரின் சமயோசித அறிவுக்குச் சான்று பத்திரமாகும். அவர்களையே சோதனைச் சாலையாக்கி கைகளை உயர்த்தச் செய்து நிரூபித்தது – நல்லதோர் அணுகுமுறையாகும்!

இப்பொழுது சமூகநீதிக் கொடியை அகில இந்திய அளவில் உயர்த்திப் பிடிக்கிறார் – நல்லதோர் திருப்பம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *