சென்னைஏப்.20 தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏதுமின்றிமக்களவை தேர்தல் நேற்று (19.4.2024) அமைதியாக நடந்து முடிந்தது.
தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக் குகள் பதிவாகின. நாட்டின் 18ஆ-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உட் பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ் நாட்டில் விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடந்தது.
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில், 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 10.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்துவாக்களிக் கும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தளம், சக்கர நாற் காலிகள், அதை இயக்க தன்னார் வலர்கள் மட்டுமின்றி, நிழற்பந்தல், குடி நீர், கழிப்பறை, குழந்தைகள் பாதுகாப்பு மய்யம் உள்ளிட்டஅடிப்படை வசதி களும் செய்யப்பட்டிருந்தன. பதிவு அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்கு அரசு சார்பில் போக் குவரத்து வசதியும் செய்து தரப்பட்டது.
190 கம்பெனி துணை ராணுவத்தினர், காவல் துறையினர், மேனாள் ராணு வத்தினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், வெளி மாநில காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என 1.30லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டனர். பதற்றமான 8,050 மற்றும் மிக பதற்றமான 181 வாக்குச்சாவடிகளில் இணைய கேமரா, துணை ராணுவப் படையினர், நுண் பார்வையாளர் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டனர். இதுதவிர, 44,801 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, ‘வெப் ஸ்ட்ரீமிங்’ முறையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதி காரிகள் நேரலையாக கண்காணித்தனர். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவும் நேரில் சென்று கண் காணித்தார்.
39 மக்களவை, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக் கப்பட்டிருந்த 68,321 வாக்குச்சாவடி களிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக, அதிகாலை 5.30 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், அதிக பட்சம் 50 வாக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு ஒத்திகை நடத்தப்பட் டது. பின்னர் அந்த வாக்குகள் அழிக்கப்பட்டு, விவிபாட் இயந்திரத்தில் பதிவானவாக்குகள் எடுத்து சரிபார்க் கப்பட்டு, தனியாக உறைகளில் பத்திரப் படுத்தப்பட்டன. பின்னர், இயந்திரம், சீலிடப்பட்டு, வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு மாவட் டங்களில் ஒருசில இடங்கள் உட்பட தமிழ்நாட்டில் சுமார் 20 வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டு, அவை சரிசெய்யப்பட்டன. இதனால், அரை மணி நேரம் வரை தாமதமாக வாக்குப்பதிவு தொடங் கியது. சென்னை லயோலா கல்லூரியில் 2 மணி நேரம் தாமதமாக தொடங் கியது. அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. நேற்று வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் அறிவித்திருந்த நிலையில், காலை 6.30 மணி முதலே பெரும்பா லான வாக்குச்சாவடிகளில் வாக்கா ளர்கள் நீண்ட வரிசையில் காத் திருந்து ஜனநாயக கடமையாற்றினர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வரிசையில் காத் திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சில வாக்குச்சாவடிகளில் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும், முக வர்கள் முன்னிலையில், பதிவான வாக்குகள், பதிவேட்டில் பதிவு செய் யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அதன்பின், மின் னணு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக பெட்டியில் வைக்கப் பட்டது. பின்னர், வாக்கு எண்ணும் மய்யங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் (‘ஸ்டிராங் ரூம்’) வைக்கப்பட்டன.இங்கு துணை ராணுவம், உள்ளூர் காவல்துறையினர் ஆயுதப் படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் 72.09 சதவீதம், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 64.54 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்ததால், எவ்வித சட்டம் – ஒழுங்கு பிரச் சினையும் ஏற்படாமல், தமிழ்நாட்டில் தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 78.72 சதவீத வாக்குப்பதிவு: புதுச்சேரி மக்களவை தொகுதியில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் இரவு 10 மணி நிலவரப்படி, 78.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரி மக்களவை தொகுதியை பொறுத்தவரை புதுச்சேரி 739, காரைக்கால் 164, ஏனாம் 33, மாஹே 31 என மொத்தம் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 10.23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பல வாக்குச்சாவடி களில் இரவு வரை வாக்குப்பதிவு நடந்தது. இரவு 10 மணி நிலவரப்படி மொத்தம் 78.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்குப்பதிவு முழுமையாக நடந்து முடிந்த பிறகு, இறுதி நிலவரம் தெரியவரும். வாக்குப்பதிவு நிறை வடைந்த வாக்குச்சாவடிகளில் முகவர்கள் முன்னி லையில் மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, லாஸ் பேட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் பொறியியல் கல்லூரி, மோதி லால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைக்கு (ஸ்டிராங் ரூம்) கொண்டு சென்று வைக்கப்பட்டன..