மும்பை, ஏப்.20- சிவில் சர்வீஸ் தேர்வில் பல முறை முயற்சி செய்தும் வெற்றி பெற முடியாத நிலையில், இடைவிடாமல் போராடிய தூய்மைப் பணியாளர் மகன் 9ஆவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
ஒன்றிய அரசு பணியாளர் தேர் வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ் வொரு ஆண்டும் ஒன்றிய மாநில அரசுகளில் காலியாக உள்ள அய்.ஏ.எஸ்., அய்.எப்.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீசஸ் காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள். பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் 4 முறையும், பொரு ளாதாரத்தில் நலித்த உயர் வகுப் பினர் 6 முறையும், ஓபிசி பிரிவினர் 9 முறையும், எஸ்சி எஸ்டி பிரிவினர் எத்தனை முறை வேண்டுமா னாலும் தேர்வுக்கு தயாராகலாம்.
இந்த முறை சிவில் சர்வீஸ் தேர்வில் பலர், வறுமையை தாண்டி வெற்றி பெற்றுள் ளார்கள். அதில் ஒருவர் தான் பிரசாந்த் போஜனே. மும்பையில் உள்ள துப்புரவு தொழிலாளியின் மகன் ஆவார். மும்பையை அடுத்த தானே கார்டன் ரோடு துப்புரவுப் பணியாளர்கள் காலனியில் வசிக்கும் சுரேஷ் -_சோனாலி இணையரின் மகன் தான் பிரசாந்த் போஜனே. பிர சாந்த் போஜனேவின் அம்மா சோனாலி தானே மாநகராட் சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தந்தை சுரேஷ், மாநகராட்சி ‘டி குரூப்’ ஊழியராக வேலை செய்கிறார்.
பிரசாந்த் போஜனே நவி மும்பை கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். 10 ஆண்டுக்கு முன்பு பொறியியல் முடித்த பிரசாந்த், அய்.ஏ.எஸ். ஆக விரும்பினார்.. இதற்காக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயா ரானார்.
யுபிஎஸ்சி நடத்தும் தேர்வில் வெற்றி பெற விரும்பி, 9 ஆண்டுக ளுக்கு முன்பு டில்லி சென்றார். அதாவது கடந்த 2015ஆ-ம் ஆண்டு முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இதில் பிரசாந்த் தோல்வி அடைந்தார்.
முதல் முயற்சியில் தோற்ற வரை குடும்பத்தினர் உற்சாகப் படுத்தி, இரண்டாவது முறை யாக தேர்வுக்கு தயாராகுமாறு உற்சாகப்படுத்தினர். பிரசாந்த் போஜனேவும் அடுத்த முயற்சியில கடினமாக உழைத்தார். எனினும் அடுத்தடுத்த தேர்வுகளி லும் அவருக்கு தோல்வியே கிடைத்தது.
ஒருமுறை அல்ல,, இருமுறை அல்ல தொடர்ந்து பல முறை தோற்றார். இதில் ஒரு கட்டத் துக்கு மேல் பெற்றோரே தங் களது மகன் மீது நம்பிக்கை இழந்ததுடன், ஊருக்கு திரும்பி வந்து ஏதாவது வேலைக்கு போ சாமி என்று கெஞ்சினார்கள்.. எனினும் பிரசாந்த் போஜனே நம்பிக்கையை கைவிடாமல் 9ஆவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கவனம் செலுத்தி வந்தார்.
படிப்பு: பெற்றோர் ஒரு கட்டத்தில் பணம் கொடுக்காத நிலையில், டில்லியில் உள்ள பயிற்சி மய்யத்தில் வேலை பார்த்து கொண்டே தேர்வுக்கு ரெடியானார். கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வை 9ஆ-வது முறையாக எழுதினார். இந்த தேர்வு முடிவை கடந்த 16ஆம் தேதி ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதில் பிரசாந்த் போஜனே பெயர் முதல்முறையாக வந்துள் ளது. அவர் தேசிய அளவில் 849ஆ-வது இடம் பிடித்தார். விடா முயற்சியால் வெற்றி பெற்றுள்ளார்.. 2020ஆம் ஆண்டே பெற்றோர் திரும்பி வரும்படி கூறியபோதும், தன் முடிவில் உறுதியாகவும், நம்பிக் கையுடனும் இருநத பிரசாந்த் வெற்றி பெற்றார்.
“இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலை யும் நீ தோத்துட்ட தோத்துட் டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும் எங் கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது” என்பது நிரூபணம் ஆகி உள்ளது.