ஆட்சி மாற்றம் நிச்சயம்! சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

Viduthalai
1 Min Read

சிதம்பரம், ஏப்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தனது மனைவியும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பா. ஜான் சிராணியுடன், சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மய்யத்தில் வாக்களித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறு கையில், “கடந்த 2019-ஆம் ஆண்டை விட இந்த தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் முழு மையாக கைப்பற்றும்” என்றார். “சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டி யிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றும் “தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பதை வாக்கு சேகரிப்பின் போது தெரிந்து கொண் டோம்” என்றும் கூறினார்.

“10 ஆண்டுகால மோடி ஆட்சியின் அவ லங்களால் மக்கள் சந்திக்கும் வாழ்வா தாரப் பிரச்சினைகள், அரசியல், பொருளாதார பாதிப்புகள் ஆகியவற்றை முன்னிறுத்தி முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் அனைவரும் பிரச்சா ரம் மேற்கொண்டோம். இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, மதச்சார்பின்மையை பாது காப்பது, கூட்டாட்சித் தத்து வத்தை பாதுகாப்பது, இந்தி யாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பது, வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண் பது உள்ளிட்டவற்றையும் முன்னிறுத்தினோம்.
இந்த பிரச்சாரத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. ஆட்சி மாற்றம் தேவை என்பதை விரும்பினர். இத னால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது” என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *