ஆம் ஆத்மி எம்.பி. எச்சரிக்கை
புதுடில்லி, ஏப்.20- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய் யப் பட்டுள்ளார்.
டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சிறையிலேயே கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி 18.4.2024 அன்று குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக வீட்டில் சமைத்த உணவு, இன்சுலின் போன்றவை அவருக்கு மறுக்கப்பட்டுள்ளதாக டில்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டினார். இதை கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்கும் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பா.ஜனதாவின் நடவடிக்கை ஒரு வரை கொல்லும் நிலைக்குக்கூட தள்ளப்படலாம். எனவே சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக கடுமையான சதி உள்ளது’ என தெரிவித்தார். ஆனாலும் இந்த நடவடிக்கைகளால் கெஜ்ரிவால் உடைந்து போகவோ, தலைவணங்கவோ மாட்டார் என்றும் அவர் உறுதிபட கூறினார்.