‘எக்ஸ்’ தளத்திலிருந்து தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவை நீக்குவது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி

Viduthalai
2 Min Read

புதுடில்லி.ஏப்.20- தேர்தல் பத்திரம் தொடர் பான ‘எக்ஸ்’ தள பதிவை நீக்கக் கோரியது ஏன்? என தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
தேர்தல் பத்திரம் தொடர்பானது தேர்தல் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகளின் சில வலைத்தள பதிவுகளை நீக்குமாறு ‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
குறிப்பாகஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்டோரின் சில பதிவுகளை நீக்க வலியுறுத்தி உள்ளது.
எனவே இந்த பதிவுகளை நீக்கிய எக்ஸ் தளம், ஆனாலும் இதில் தங்களுக்கு உடன் பாடு இல்லை என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் நீக்கக்கோரிய பதிவுகளில் ஒன்று தேர்தல் பத்திரம் தொடர்பானது என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, இந்தப் பதிவுகளை நீக்கக் கோரியது ஏன்? என தேர்தல் ஆணையத் துக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளரும், சமூக வலைத்தளப்பிரிவு தலைவருமான சுப்ரியா சிறீநாத் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர் தல்கள் நடைபெறுவதையும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள், மோசமான மற் றும் ஆபாசமான அறிக்கைகள் மூலம் தேர் தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்வதும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
அதனால்தான் தேர்தல் பத்திரங்கள் பிரச்சினையை எழுப்பிய ஒரு பதிவை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத் திருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஏன் அப்படி செய்ய வேண்டும்?
இதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் தேர்தல் பத்திரங்கள் விவகாரம் அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பத்திரங்கள் விவ காரத்தில் விளக்கம் அளிக்க தன்னால் இயன்ற வரை முயற்சி செய்தார்.

மிரட்டி பணம் பறிக்கும் ஊழல் தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜனதாவுக்கு நிதியளித்த வர்கள் பெரிய பெரிய ஒப்பந்தங்களை பெற்று இருக்கிறார்கள். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் மிரட்டி நன் கொடை திரட்டப்பட்டுள்ளது.
எனவே இது ஒரு மிரட்டி பணம் பறிக்கும் ஊழல் ஆகும். இதைப்பற்றி நாட்டு மக்கள் தற்போது அறிந்து இருக்கிறார்கள். தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் ஊழலை வளர்த்துள்ள பிரதமர் ஊழலின் சாம்பியன்’ என்று ராகுல் காந்தியும் கூறியுள்ளார்.
சமூக ஊடக தளங்கள். டிஜிட்டல் தளங் கள் மற்றும் யூடியூப் சேனல்களால் இந்த அரசு மிகவும் சங்கடமாக உள்ளது. ஏனென் றால் வேலை வாய்ப்புகள், விலைவாசி உயர்வு, ஹத்ராஸ் சிறுமிகளுக்கான நீதி அல்லது விளையாட்டு வீராங்கனைகளுக் கான நியாயம் பற்றி கேட்காத அரசின் முக் கிய ஊடகங்களின் பணியை இவைதான் செய்து வருகின்றன.
தகவல் தொழில்நுட்ப சட்டம்-2021 விதிகள் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சர்ச்சைக்குள்ளாகி வரும் இந்த நேரத்தில் நேரத்தில் சமூக ஊடக தளங்கள் அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன.-இவ்வாறு சுப்ரியா சிறீநாத் குற்றம் சாட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *