இந்தியாவுக்கு வெற்றிதான்! வாக்கு பதிவுக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 20- மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான நேற்று (19.04.2024) தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.அய்.இ.டி. கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தபின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கட மையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
செய்தியாளர் கேள்வி: திமுக-விற்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *