இதற்குப் பெயர்தான் கடவுள் சக்தியோ!

1 Min Read

கோயில் பிரசாதம் பக்தரை கொன்றது
75 பேருக்கு உடல் நலம் பாதிப்பு

மும்பை,ஏப்.19- மராட்டிய மாநிலத்தில் திராப்பூரில் உள்ள மஜ்ரி கோலிரி பகுதியில் உள்ள காளி கோவிலில் சைத்ரா நவராத்திரி திருவிழா 14.4.2024 அன்று நடை பெற்றது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு மாலையில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாப்பிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பிரசாத உணவை சாப்பிட்ட பக்தர் களுக்கு இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. பலர் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சினைகளால் அவதிப் பட்டனர். இதையடுத்து அவர்கள் இரவோடு, இரவாக அருகில் உள்ள வரோரா மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 75பேருக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதில் 6 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக சந்திராப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குருபம் யாதவ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றவர்க ளின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *