இதுவும் பகவான் செயலோ! கருநாடகத்தில் கோவிலுக்குச் சென்ற 4 பேர் லாரி மோதி மரணம்

Viduthalai
1 Min Read

பெங்களூரு, ஏப்.19- கருநாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் அர்ஜுனகி கிரா மத்தின் அருகே 13.4.2024 அன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரியும், அந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்தவிபத்தில் கார் அப்பளம் போல சுக்குநூறாக நொறுங்கிப் போனது. லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இதில், காரில் இருந்த சிறுவன் உள்பட 4 பேர் நிகழ்வு இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். காவல்துறையினர் விசாரணை யில், பலியானவர்கள் விஜயாப்புரா டவுனைச் சேர்ந்த ரவிநாத் சுனில் லால் பட்டாரா (வயது 52), புஷ்பா ரவிநாத் பட்டாரா (40), அர்ஜுன குஷால் சிங் ராஜ்புத் (32). மேகராஜா ராஜ்புத் (12) என்பது தெரியவந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர் கள் 7 பேரும் காரில் ஜம கண்டியில் உள்ள கோவிலுக்குசென்ற போது இந்த விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *