கொளுத்தும் வெயிலில் … முரசொலிப்போம்! முரசொலிப்போம்! திராவிட முரசொலிப்போம்! வேட்பாளர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்த ஆசிரியர் கி. வீரமணி!

Viduthalai
3 Min Read

தஞ்சை, ஏப். 19 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தி.மு.க. சார்பில் போட்டியிடும் இந்தியா கூட் டணி வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஏப்ரல் 2 இல் தென்காசி முதல் ஏப்ரல் 17 இல் தஞ்சை வரை தமிழ் நாடு தழுவிய அளவில் பங்கேற்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணத்தின் இறுதி நாளான 17.04.2024 அன்று மாலை தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் பிற்பகல் 3 மணியிலிருந்து, 6 மணிக்குள் தஞ்சை பழைய பேருந்து நிலையம் பெரியார், அண்ணா சிலைகளுக்கருகில் இந்திய கூட்டணியின் தி.மு.க. வேட்பாளரான ச.முரசொலி அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 4.45 மணி அளவில் கலந்து கொண்டு சிறப்புரை மற்றும் நிறைவுரை ஆற்றினார். இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் அருணகிரி அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார்.

தஞ்சையில் தமிழர் தலைவர்!
பிற்பகல் 3 மணியிலிருந்து இந்திய கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர் ச.முரசொலி அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசிக்கொண்டிருந்தனர். வெயில் கொளுத்துகிறது. வியர்வை உடலெங்கும் சுரந்து பெருக்கெடுக்கிறது. ஆனாலும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். நாற்காலி கள் இல்லாததால் பலரும் நின்றுகொண்டிருந்தனர். ஆசிரியர் முகத்திற்கு நேராக வெயிலடித்துக் கொண் டிருந்தது. மேடையிலிருந்த சிலர் நாளிதழ்களை முகத்திற்கு அரணாக வைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட் படுத்தாமல் ஆசிரியர் அமர்ந்திருந்தார். மக்களும் மேடையின் மூன்று பக்கமும் அமர்ந்து ஆசிரியர் பேசப்போவதை கேட்கத் தயாரானார்கள்.

நிறைவாக ஆசிரியர் பேச அழைக்கப்பட்டார். அவர் தனது உரையில், “முரசொலி தான் கலைஞரின் மூத்த பிள்ளை; இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட இளைய பிள்ளைதான்” என்று அதிரடியாகத் தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே ஆசிரியர் இப்படி பேசுவார் என்பதை எதிர்பாராத மக்கள் வியப் புடன் கையொலி செய்தனர். தொடர்ந்து அவர், “இந்த முரசொலி எதற்கும் அஞ்சமாட்டான். 1965 இல் பாளையங்கோட்டைச் சென்றுவிட்டு தான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்றார்” என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றி நினைவூட்டி, ‘‘ஆட்சிகளையே ஆட்டம் காண வைத்தது முரசொலி” என்று முரசொலி என்ற பெயருக்கான வீரியமான வரலாற்றையும் குறிப்பிட்டு, அப்படிப்பட்ட முரசொலி பெயரிலேயே தஞ்சை தொகுதிக்கு வேட்பாளர் வாய்த்திருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு, கொளுத்தும் வெயிலை விடக் கடு மையாக பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை யும், மோடியின் இரட்டை வேடத்தையும் அம்பலப் படுத்தினார். இறுதியாக “முரசொலிப்போம்! முரசொலிப் போம்! திராவிட முரசொலிப்போம்!” என்று முழங்கி, “உதயசூரியன் சின்னத்தில் ’முரசொலி’ க்கு வாக்களித்து அவரை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

முன்னிலையேற்ற சிறப்புக்குரியவர்கள்
தி.மு.க. மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், சி.பி.அய்.(எம்) மாநிலக்குழு உறுப்பினர் நீலமேகம், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் து.செல்வம், தி.மு.க. மாநகரச் செயலாளர் மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் இராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வன், வி.சி.க.மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், சி.பி.அய். மாவட்டச் செய லாளர் முத்து உத்திராபதி, ம.ஜ.க. மாவட்டச் செயலாளர் வல்லம் ரியாஸ், மக்கள் நீதி மய்யம் துணைப் பொதுச்செயலாளர் கண்ணன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் தியாகராஜன், ஆம் ஆத்மி மாவட்டத் தலைவர் சபீக் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில், கழகக் காப்பாளர் மு.அய்யனார், மாநகரச் செயலாளர் அ.டேவிட், தஞ்சை ஒன்றியத் தலைவர் ப.சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர் காசி. அரங்கராசன், மாவட்டத் துணைத் தலைவர் முத்து.இராஜேந்திரன், மாநகர துணைத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.இராமலிங்கம், மாவட்ட இணைச் செய லாளர் தீ.வ.ஞானசிகாமணி, தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர் இரா.சேகர், தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மாநில ப.க. ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார் ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *