பிஜேபி – சங்பரிவார்களைத் தெரிந்து கொள்வீர்!

Viduthalai
2 Min Read

தெலங்கானா, ஏப்.19 ராமநவமி பெயரில் நடந்த ஊர்வலத்தில் பழங் குடியின மக்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளியினை தாக்கி ஜெய் சிறீராம் என்று கத்திக்கொண்டு சேதப் படுத்திய ஹிந்துத்துவ வன்முறைக் கும்பலை காவல்துறை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்த நிகழ்வு அதிர் வலையை ஏற்படுத்தி உள்ளது
நாடு முழுவதும் ராமநவமி பெய ரில் ஊர்வலங்கள் நடைபெற்றது. குறிப்பாக இம்முறை குருத்துவாரா முன்பும் ‘ஜெய்சிறீராம்’ என்று காட்டுக்கூச்சலிட்டு ஆபாச வார்த் தைகளில் பேசி உள்ளனர். பொது வாக மசூதிகளின் முன்தான் இவ் வாறு செய்வார்கள். ஆனால் ராம நவமியை ராமன் கோவிலில் கொண் டாடாமல் மசூதி மற்றும் குருத் துவாராக்களின் முன் மிகவும் அருவருத்தக்கத்க்கவகையில் கொண்டாடினர்.

தெலங்கானா மாநிலத்தில் மஞ்சேசியல் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான கண்ணேபள்ளி என்ற கிராமத்தில் அங்குள்ள பழங்குடியினச்சமூக மக்களின் பிள்ளைகள் தங்கிப் படிக்க செயின் மதர் தெரசா போர்டிங் ஸ்கூல் உள்ளது.
அதை ஒரு கிறிஸ்தவ நிறுவனம் பலஆண்டுகளாக நடத்தி வருகிறது. அப்பள்ளியில் படித்த பலர் இன்று அதிகாரிகளாகவும் மருத்துவர் களாகவும், இதர பெரிய பதவிகளி லும் உள்ளனர்.
இந்த நிலையில் ராமநவமி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நகர்ப்புறப்பகுதியில் இருந்து
20-க்கும் மேற்பட்டோர் கையில் ஆயுதங்களுடன் ஜெய் சிறீராம் என்றும் ஆபாச வார்த்தைகளைப் பேசிக் கொண்டும் பள்ளியை முற்று கையிட்டனர்.
ஊர்வலமாக செல்பவர்கள் வசிப்பிடங்களுக்கு அப்பால் அமைதியான இடத்தில் இயங்கும் பள்ளியை திட்டத்தோடு சென்று முற்றுகையிட்டனர்.

முதலில் கேட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து அங்கி ருந்த புனித தெரசா படத்தினை அடித்து நொறுக்கினர். பின்னர் பள்ளி வளாகத்தில் நுழைந்து அங்கிருந்து பூந்தொட்டிகளை உடைத்து வீசினர். மேலும் விடுதியில் பணியாற்றிக் கொண்டு இருந்த ஊழியர்களைத் தாக்கினர். இதனைக்கண்டு அங்கு தங்கி இருந்த பழங்குடி இனச்சிறுவர்கள் அச்சத்தில் மூழ்கினர்.
பிள்ளைகள் பயப்படுகிறார்கள் அங்கிருந்து செல்லுங்கள் என்று கூறிய பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கி காயப்படுத்தினார்கள்.

பள்ளி யின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்குள் நுழைந்து ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அலுவலக அறையை உடைத்துள்ளனர். அங் கிருந்த பெண்பால் ஆசிரியர்கள் வன்முறையாளர்களைக் கையெ டுத்துக் கும்பிட்டும் கேட்காத வன்முறையாளர்கள் அவர்களையும் தாக்கி அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் கிழித்து வீசினர். நீண்ட நேரம் ஜெய்சிறீராம் என்று காட்டுக்கூச்சலிட்ட வன்முறையா ளர்கள் பள்ளியை சூறையாடிய பிறகு காவல்துறையினர் தாமதமாக அங்குவந்தனர்.

அவர்கள் வரும் போது ஹிந்துத் துவ வன்முறையாளர்கள் பள்ளி முழுவதையும் சேதப்படுத்தி விட் டனர். இதனை அடுத்து காவல்துறையினர் அனைவரையும் அங்கிருந்து, செல்ல கூறினார்களே தவிர அவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *