திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்!
வாக்காளப் பெருமக்களே, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அருமை வாக்காளப் பெருமக்களே!
நடக்கவிருக்கும் 18 ஆவது மக்களவைத் தேர்தல் என்பது மிகவும் அதிமுக்கியமான ஒன்றாகும்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான மோடி ஆட்சி என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடிய எதேச்சதிகார ஆட்சியாகும்.
1. அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மையைத் தகர்க்கக் கூடியதாகும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை இப்பொழுது பி.ஜே.பி. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
2. பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியா என்ற ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் நாட்டை, தனது ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் அடிப்படையில் ‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ என்று ஆக்கு வதைத் தனது கொள்கை அறிவிப்பாகவே கூறி வருகிறது.
3. அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் என்ற கோட்பாட்டுக்கு மாறாக, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள எதிர்க்கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்ப்பது, குறுக்கு வழிகளைக் கையாண்டு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்து பி.ஜே.பி. ஆட்சியாக மாற்றுவது – அதற்காகப் பணம், பதவி மற்றும் திரிசூலங்களான வருமான வரித்துறை, சி.பி.அய்., அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி அச் சுறுத்துவது என்பதே பாசிச பா.ஜ.க.வின் பச்சையான அணுகுமுறையாக உள்ளது.
4. ‘‘மதச்சார்பின்மை” என்ற இந்திய அரசமைப்புச் சட்டக் கோட்பாட்டின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தி, ஹிந்து ராஜ்ஜியம் என்பது, ராமர் கோவில் கட்டுவது, குடியுரிமைப் பறிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை வெளியேற்றுவது, மக்கள் உண்ணும் உணவு, உடைகளில்கூட மதவாத மூக்கை நுழைப்பது எல்லாம் பி.ஜே.பி. ஆட்சியின் அன்றாட அவலமாகி விட்டன.
ஆகஸ்டு 15, சுதந்திர நாளில் ஒன்றிய அரசு வெளி யிடும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற ‘‘மதச்சார்பின்மை” (செக்குலர்) என்ற சொல்லையே நீக்கி வெளியிடுவது.
5. அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ‘சோசலிஸ்டு’ என்பதற்கு மாறாக, பொதுத் துறை நிறு வனங்களை தனியார் மயமாக்குவது – கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்களை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்வது, தொலைப்பேசித் துறை, துறைமுகம், விமான நிலையம் போன்ற முக்கிய துறைகளைத் தனியார் மயமாக்குவதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் ‘சோசலிஸ்டு’ என்ற அம்சத்தை செல்லாக் காசாக்குவது.
6. அரசமைப்புச் சட்டத்தில் முக்கியமான சமூக நீதியை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது – குறிப்பாக, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு என்று இருந்து வந்த இட ஒதுக்கீட்டில் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத, நீதிமன்றங் களால் ஏற்கப்படாத பொருளாதார அளவு கோலைத் திணிப்பது (எடுத்துக்காட்டு EWS), சிறுபான்மையினருக் கான கல்வி உதவித் தொகையை ரத்து செய்வது – இன்ன பிற வகைகளில் எல்லாம் சமூகநீதிக்குச் சவக் குழி வெட்டுவது – இவைதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் கொள்கையும், செயல்பாடுகளுமாகும்.
7. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரால் ‘பண மதிப்பு இழப்பு’ என்ற பெயரில் ஒரே நள்ளிரவில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி தன்னிச்சையாக அறிவித்ததன் மூலம் ஏற்பட்ட குழப்பமும், நலிவும் சாதாரணமானதல்ல. கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கியதுதான் கண்ட பலன். புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடித்து, அதையும் பிறகு செல்லாது என்று அறிவித்த கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது!
ரூபாய் மதிப்பு இழப்பால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நசிந்து போய், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வருவாயின்றி, தற்கொலை அளவுக்கு விரிந்த கொடுமையை எளிதில் மறக்க முடியுமா?
இத்தகைய பாசிச கொடுங்கோல் ஆட்சி நீடிக்க லாமா? என்பதை வாக்காளப் பெருமக்களே, சிந்தியுங் கள் – இந்த ஆட்சியை நீடிக்கவிட்டால் ஏற்படும் அபாயத்தை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்து, இந்த பாசிச பா.ஜ.க. ஆட்சியை விரட்டியடியுங்கள்!
காங்கிரஸ் – தி.மு.க.
தேர்தல் அறிக்கைகள்!
அதேநேரத்தில் காங்கிரஸ், தி.மு.க. தேர்தல் அறிக் கைகள் அரசமைப்புச் சட்டத்தின் சாராம்சத்தைக் கட்டிக் காக்கும் வகையில் அமைந்திருப்பதை நோக்க வேண்டும்.
1. நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு
2. இட ஒதுக்கீடு 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கம்
3. பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு
4. நீட்டிலிருந்து மாநிலங்களுக்கு விலக்கு
5. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை கிடையாது
6. அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து
7. பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம்
8. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம்
9. பெகாசஸ் முறைகேடு தொடர்பான விசாரணை நடத்தப்படும்
என்பதான காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் பெரும்பாலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையோடு ஒத்துப் போவதைப் பார்க்க முடிகிறது.
தி.மு.க. ஆட்சியின்
சாதனைகள்!
தி.மு.க. ஆட்சி ஏற்ற குறுகிய இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் சாதிக்கப்பட்டவை கடைக்கோடி மக்களிடத்திலும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளன.
குறிப்பாக, பெண்களுக்குக் கட்டணமில்லாத ‘விடியல் பயணத் திட்டம்’ (மாதம் ஒன்றுக்கு ரூ.888 சேமிப்பு).
‘புதுமைப் பெண் திட்டம்’ என்ற பெயரால், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம்.
‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ வாயிலாக தமிழ்நாட்டில் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் (பயன்பெறுவோர் ஒரு கோடியே 15 லட்சம்).
‘அரசு பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம்’ என்ற – கல்வி வளர்ச்சிமூலம் எதிர்காலத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திட்டம்
மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவி
வெளிநாடுகளிலிருந்து தொழில் முதலீடுகள்
ஒன்றிய அரசு உதவியில்லாமலேயே இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாத்த மானுட நேயம் மிகுந்த உன்னத செயல்பாடு!
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
சமூகநீதியில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, மாநில உரிமைகளுக்கு அரசமைப்புச் சட்ட திருத்தம், தேசிய நூலாக திருக்குறள், புதிய கல்வித் திட்டம் ரத்து!
என்று எழுதிக் கொண்டே போகலாம்.
இந்த நிலையில், வாக்காளர்கள் குறிப்பாக தமிழ் நாட்டு வாக்காளர்கள் என்ன செய்யவேண்டும்?
தி.மு.க. கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு வாக்களித்தால்…
தி.மு.க. கூட்டணி அடங்கியுள்ள இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களையே அவர்களது சின்னத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும். வெற்றி வாய்ப்பு இல்லாத மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தால் என்னாகும்? உண்மையிலேயே ஜனநாயகத்தில், மக்களாட்சியில் நம்பிக்கை இருக்குமேயானால், பா.ஜ.க. மோடி அரசின் 10 ஆண்டுகால எதேச்சதிகார, ஜனநாயக விரோத – மக்கள் விரோத ஆட்சி மீண்டும் வந்தால், ஏதோ தற்போதுள்ள தி.மு.க. கூட்டணி, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குமட்டும் இடையூறு என்று கருதக் கூடாது. இவர்களுடைய கட்சிகளும் இல்லாத ஒரே கட்சி, ஒரே ஆட்சி (மாநில கட்சிகளிலோ வேறு அகில இந்தியக் கட்சிகளே கூட)யாக மட்டுமே சர்வாதிகாரம் படமெடுத்தாடும் என்ப தால், தேர்தலில் வாக்காளர்கள் அதைத் தெளிவாகச் சிந்தித்து, வாக்குகளை இந்தியா கூட்டணி என்றுள்ள (தி.மு.க.) கூட்டணிக்கு செலுத்தினால், இந்தத் தலைமுறை மட்டுமல்ல, இனிவரக்கூடிய தலைமுறையினரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.
10 ஆண்டுகளில் மோடி அரசின் வெறுப்பு அரசிய லால் பாதிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளை மீட் டெடுக்க முடியும்.
எனவே, இதில் கவனச்சிதறலோ, அலட்சியமோ, வேறு தற்காலிக லாபங்களோ, ஜாதி பார்த்தோ வாக்களித்தால், இந்திய நாடு இனி தேர்தல்களையே பார்க்க முடியாததாகிவிடும்.
எதிர்கால நலனை எல்லா வகையிலும் கருதி, கணக்கில் கொண்டு, நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வது யாருக்கோ அல்ல – நமக்காக – ஆம்! நமது நலனுக்காக – நாட்டு நலனுக்காக!
தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்து, இந்தியாவே திரும்பிப் பார்க்கச் செய்யும் பெருவெற்றியைத் தாரீர்! தாரீர்!!
இது பெரியார் மண் – திராவிட மண் என்று நிரூபித்து, நமது சுயமரியாதைக்குக் கட்டியம் கூறுவீர்!
கடந்த ஏப்ரல் 2 இல் தொடங்கி, 17 ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் எனது தேர்தல் பரப்புரையில் மக்களின் புத்தெழுச்சியை நேரில் காண முடிந்தது!
இதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைத்த அனை வருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
இப்போது இல்லை என்றால், இனி எப்போதும் இல்லை!
கவனச்சிதறல் இல்லாமல் வாக்களியுங்கள், இந்தியா கூட்டணிக்கு!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18-4-2024