மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் – ஒரு கோடி இளைஞருக்கு வேலைவாய்ப்பு ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை : ராட்டிரிய ஜனதா தள தேர்தல் அறிக்கை

1 Min Read

பாட்னா,ஏப்.16- ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேர்தல் அறிக்கை 13.4.2024 அன்று வெளியிடப்பட்டது.

பீகார் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலுக்காக கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு வாக்குறுதிகளை அந்த கட்சி வழங்கி இருக்கிறது. கட்சியின் தலைவரும், மாநில மேனாள் துணை முதல்-அமைச் சருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அதில், “ஒன்றியத்தில் இந்தியா கூட் டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு 1 கோடி வேலை வாய்ப்புகளை ராஷ்ட் ரீய ஜனதாதளம் உறுதி செய்யும்.
வருகிற சுதந்திர நாள் முதல் இதற்கான நடைமுறைகள் தொடங்கும். வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து கிடைக் கும் விடுதலையாக அது இருக்கும். வேலை யில்லா திண்டாட்டம் எங்களது மிகப்பெரிய எதிரி ஆகும். ஆனால் பா.ஜனதா தலை வர்கள் இதைப்பற்றி பேசுவது இல்லை. அவர்களது 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை. ஆனால் நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவின் போது, ஏழை குடும் பங்களை சேர்ந்த எங்கள் சகோதரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் திட்டத்தை தொடங்குவோம்.

பீகாரில் சிறந்த இணைப்பு வசதி களை உருவாக்கும் வகையில், 5 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச் சிக்காக ரூ.1.60 லட்சம் கோடி திட்டம் உருவாக்கப்படும். அரசு ஊழியர் களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.500-க்கு சமை யல் எரிவாயு உருளை வழங்கப்படும். மாநிலத்தில் மக்களுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

முப்படைகளில் அக்னிவீரர்கள் திட் டத்தை ரத்துசெய்வோம். தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *