மோடி ஒப்புக்கொண்ட ஒரே உண்மை!

Viduthalai
2 Min Read

நெல்லையில் மோடி இன்று (15-4-2024) பேசியிருக் கிறார். கடைசியாக அவரது உரையை முடிக்கும் பொழுது, ‘‘இதுதான் தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு வரு கின்ற என்னுடைய கடைசி பயணம்” என்று சொன்னார்.
ஓர் உண்மையைச் சொல்லியிருக்கிறார். இதுவரை யில் மோடியின் வாயில் உண்மையே வந்தது இல்லை.
தமிழர்களுக்கு பெருமை என்னவென்றால், பொய்யையே பேசக்கூடிய, அதற்கு மட்டுமே பழகிய மோடியை, உண்மையைச் சொல்ல வைத்த பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு. திராவிட மண்ணுக்கு உண்டு – திராவிட ஆட்சி நாயகருக்கு உண்டு.
நேற்றுகூட நம்முடைய முதலமைச்சர் என்ன சொன்னார், ‘‘தமிழ்நாட்டிற்கு இதுவரையில் 10.76 லட்சம் கோடி ரூபாய்க்குமேல் கொடுத்திருக்கிறோம்” என்று பிரதமர் மோடி சொல்கிறார்; இது அவ்வளவும் ‘‘ஜூம்லா” அவர்கள் மொழியில்.
என்னடா, திடீரென்று ஆசிரியர் ஹிந்தியில் பேசு கிறாரா என்று நினைக்கலாம். அல்லது ஆசிரியர் நல்லாதானே இருந்தார், என்னாயிற்று அவருக்கு என்று நீங்கள் நினைக்கலாம்.

ஓராண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார். அப்படியென்றால், கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கவேண்டும் அல்லவா? கிடைத்ததா, இல்லையே!
அதேபோன்று, கருப்புப் பணத்தை ஒழித்து, ஒவ் வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று சொன்னாரே, செய்தாரா?
நம்முடைய பிரதமர் மோடியைத் தவிர வேறு யாரும் வாங்கவே முடியாது
நடிப்புக் கலையில் உச்சக்கட்டத்திற்கு ஒரு பரிசு இருக்கிறது என்றால், அது உலகமகா அளவில் நம்முடைய பிரதமர் மோடியைத் தவிர வேறு யாரும் வாங்கவே முடியாது.

அவர் உண்மையைச் சொல்வதில்லை என்பதற்கு அடையாளம்.
இன்றைக்கு பிரதமர் மோடி சொன்ன ஒரே உண்மை – ‘‘இதுதான் நான் தமிழ்நாட்டிற்குத் தேர்தலுக்காக வருகிற கடைசிப் பயணம்” என்றார்.
அடுத்த தேர்தலுக்கு அவர் தமிழ்நாட்டிற்கு வரலாம், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. ஏனென்றால், ஒன்றியத்தில் ஜனநாயகத்தை நம்புகின்ற இந்தியா கூட்டணி ஆட்சிதான் அமையப் போகிறது.
மயிலாடுதுறை தொகுதியில் நடைபெற்ற
தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் – 15.04.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *