பிரதமருக்கு பாதுகாப்பு – வாலிபர் சாவு

viduthalai
1 Min Read

திருவனந்தபுரம்,ஏப்.16– கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி 14.4.2024 அன்று இரவு கொச்சிக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.
பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதி களில் போக்குவரத்து தடை செய் யப்பட்டு இருந்தது. இதேபோல் எம்.ஜி. சாலை அருகே போக்கு வரத்து தடைசெய்யப்பட்டு, சாலையின் குறுக்கே காவல் துறையினர் கயிறு கட்டி இருந்த னர். இந்த நிலையில் அந்த வழி யாக எர்ணாகுளத்தை சேர்ந்த மனோஜ் உண்ணி (வயது 26) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். சாலையின் குறுக்கே கட்டியிருந்த கயிறை கவனிக் காமல் சென்றதால், மனோஜ் உண்ணியின் கழுத்தில் கயிறு சிக்கி இறுக்கியது.
மேலும் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.அவரை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் உண்ணி இறந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *