அடிக்கல் நாட்டியது என்னாச்சு?

1 Min Read

“அரசால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்போடு நின்றுவிடாமல் செயல்படுத்துகிறோம். அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களைத் துவக்கி வைக்கும் பணியை என்னிடமே அளிப்பீர்கள்”

– பிரதமர் மோடியின் செங்கோட்டை சுதந்திர தின உரை. 2023 ஆகஸ்ட் 15.

மேற்கு வங்கத்தில் ஷேத்திரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சியில் 2023 ஆகஸ்ட் 12-ஆம் தேதி பேசிய பிரதமர் மோடி, “அசாமின் கவுஹாத்தி முதல் மேற்கு வங்கம் கல்யாணி வரையிலும், ஜார்கண்டில் தியோகர் முதல் பீகாரில் தர்பங்கா வரையிலும் சிறந்த சிகிச்சை பெறும் வகையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப் பட்டுள்ளன” என்றார். மோடி குறிப்பிட்ட பீகார் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படவில்லை.
மோடியின் பொய்யை ராஷ்ட்ரிய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தோலுரித்தார்கள். காலி நிலத்தின் படத்தையும் வெளி யிட்டார்கள். “பிரதமரிடம் இருந்து நாடு உண்மையை எதிர்பார்க்கின்றது. ஆனால், அவர் பொய் சொல்கிறார்” என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சொன்னார். இப்படித்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை யின் 95 சதவிகித பணிகள் முடிவடைந்து விட்டதாக மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா பொய் சொன்னார். 2019இல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸின் ஒற்றைக் கல், மோடியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *