Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: மக்களின் தீர்ப்பின்படி தகுதியற்ற மோடி நீக்கப்படுவார் – தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
அரசுதமிழ்நாடு

மக்களின் தீர்ப்பின்படி தகுதியற்ற மோடி நீக்கப்படுவார் – தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்

Last updated: April 15, 2024 3:26 pm
Published: April 15, 2024
தமிழ்நாடு
SHARE

மக்களின் தீர்ப்பின்படி
தகுதியற்ற மோடி நீக்கப்படுவார்
தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்
“தி வீக்” ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டி

சென்னை,ஏப்.15- தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத் தலைவர்மு.க.ஸ்டாலின் அவர்கள் “தி வீக்” ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டி வருமாறு,

கேள்வி: கடந்த சில நாட்களாக நாடாளு மன்றத் தேர்தலுக்காக களத்தில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்களின் கணிப்பு என்ன?
பதில்: பதினேழு தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையை இதுவரை முடித்துவிட்டேன். திமுக கூட்டணியே வெல்லும், சாதாரணமான வெற்றியாக அல்ல, மகத்தான வெற்றியாக அமை யும் என்பது மக்களின் முகங்களில் தெரிகிறது.

கடந்த மூன்றாண்டு காலமாக திராவிட மாடல் ஆட்சியானது மக்களுக்குச் செய்து கொடுத்த மகத்தான சாதனைகள் அனைத்தையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். எந்தத் திட்டத்தின் பெய ரைச் சொன்னாலும் மக்கள் கைதட்டுகிறார்கள். எனவே, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது எங்களுக்கு இருந்த ஆதரவைவிட இப்போது ஆதரவு இன்னும் அதிகமாகி இருக்கிறது.
அதே போல், மோடி மீதான கோபமும் அதிகமாகி இருக்கிறது. மோடி என்பது போலி யாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பம் ஆகும். அந்தப் பிம்பம் உடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் மோடி வெற்றி பெறவில்லை. அதைப் போலவே இந்தத் தேர்தலில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற உறுதி மக்களிடம் இருப்பதைப் பார்க்கிறேன். தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் தொடர்ந்து துரோகம் இழைப்பதையே தொழிலாகச் செய்து வரும் பாஜகவை வீழ்த்தும் உறுதி மக்களிடம் இருக்கிறது. அந்த பாஜகவின் பாதம்தாங்கியாக இருந்து துரோகம் இழைத்தவர் பழனிசாமி. இன்றைய தினம் பாஜக போட்டுத்தந்த திட்டத் தின்படியே தனி அணியை உருவாக்கி சதிநாடகம் போட்டு வருகிறார் பழனிசாமி. இதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இந்த இரண்டு அணி யையும் மக்கள் ஒருசேர வீழ்த்தத் தயாராகி விட்டார்கள்.

Also read

தமிழ்நாடு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை
மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் மாநிலத்திற்குக் கல்வி நிதியைத் தருவோம் என்று கூறுவதா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடத்துவது கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?

கேள்வி : டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, இந்தத் தேர்தல் நெருக் கத்தில் கைதுசெய்ததன் நோக்கம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: மோடியின் தோல்வி பயம்தான் அவரைத் தவறுக்கு மேல் தவறு செய்ய வைக்கிறது. 370 இடம் பிடிப்போம், 400 இடம் பிடிப்போம் என்பவர் எதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை, அதிலும் குறிப்பாக மாநில முதலமைச்சர்களைத் தேர்தல் நேரத்தில் கைது செய்ய வேண்டும்? இந்தியா கூட்டணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரமாட்டார் என்று பாஜக நினைத்தது. கடைசி வரைக்கும் இருக்க மாட்டார் என்று நினைத்தார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடித்து விட்டார் கெஜ்ரிவால். வடக்கில் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி அணி யானது வலுவாக அமைந்துவிட்டது. இங்கெல்லாம் போய் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தால் பாஜக ஒரு சில தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாது என்பதே கள நிலவரம். அவரை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கவும், அவரது இமேஜை உடைக்கவும் இதனைச் செய்துள்ளார்கள்.
உண்மையில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர் களின் செல்வாக்கு, அவரது கைதுக்குப் பிறகு மிகமிக அதிகமாகி விட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் கைது, பாஜக ஆதர வாளர்களையே மனமாற்றம் செய்துள்ளது. ‘இது அடக்குமுறை ஆகும்’ என்று அவர்களே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். நடுநிலை வாக்காளர் களையும் இது யோசிக்க வைத்துள்ளது. அவரைக் கைது செய்தது தவறு என்று பாஜக மேலிடத் தலைவர்களே தங்களுக்குள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தக் கைதுக்கு பிறகு வட மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு வெகுவாக சரிந்துவிட்டது.

சிறையில் இருந்தபடி ஆட்சி நடத்தும் அவரின் நெஞ்சுரத்தை நான் பாராட்டுகிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக என்றும் துணை நிற்கும்.

கேள்வி: கைது செய்யப்படும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பிணைகூட மறுக்கப்படுகிறது. இது ஏன்?
பதில்: நீதிதேவதையின் கண்கள் கட்டப் பட்டிருப்பதால் வெளிச்சம் கிடைக்கத் தாமத மாகலாம். ஆனால், நீதி தேவதையின் நியாயத் தீர்ப்புதான் இறுதி வெற்றியாக அமையும்.

கேள்வி : 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ராகுல்காந்தி அவர்களை நீங்கள் பிரதமர் வேட்பாளராகத் தமிழ்நாட்டில் முன்வைத் தீர்கள். இந்த முறை “இந்தியா” கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்று நீங்கள் முன் வைக்காதது ஏன்?
பதில்: இளம்தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மீது தி.மு.க தலைவரான நான் மட்டுமல்ல, “இந் தியா” கூட்டணியில் உள்ள அனைத்துத் தலைவர் களும் மிகுந்த நம்பிக்கை வைத் துள்ளார்கள்.
இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இனியும் நீடிக்கக்கூடாது என்பதையும், மறுபடியும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், இந்தியா வில் ஜனநாயகம் இருக்காது என்பதையும் அடிப் படையாகக் கொண்டது. நேர்மையான தேர்தல் முறையும் இருக்காது என்பதால் பா.ஜ.க. எனும் மக்கள் விரோத அரசியல் கட்சிக்கு எதிராக நடக்கின்ற ஜனநாயகப் போர்தான் இந்தத் தேர்தல்.

இந்தப் போரில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவது ஒன்றே தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முதன்மையான நோக்கம்.

கேள்வி: வேண்டாம் மோடி என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லவேண்டும் அல்லவா?
பதில்: மோடி வேண்டாம் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்ட நிலையில், மாற்று யார் என்பது மக்களின் தீர்ப்பின் வாயிலாகவே உறுதியாகி விடும்.
ஆட்சி மாற்றம்தான் முக்கியம் என மக்கள் முடிவு செய்துவிட்டால், அடுத்து யார் வருவார் என்பதைவிட, இந்தத் தேர்தலில் யாரை விரட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் முதன் மையான நோக்கமாக இருக்கும். மக்களின் தீர்ப்பின்படி, தகுதியற்ற மோடி நீக்கப்படுவார். தகுதியான தலைவர் நாட்டை ஆள்வார்.

கேள்வி : இந்தப் பத்தாண்டுகால மோடி ஆட்சி குறித்த உங்கள் கருத்து என்ன?
பதில்: குஜராத் மாநிலத்தை வளப்படுத்தி விட்டதாகப் பொய்யான பிம்பத்தைக் காட்டி மோடியை 2014 தேர்தலில் வளர்ச்சியின் நாயக னாக அறிமுகம் செய்தது பாஜக. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார் மோடி. அந்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்ற வில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கருப்புப்பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தரப்போவதாக வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்தார்கள். அதுதான் அவர்களை வெற்றி பெற வைத்தது. ஆட்சிக்கு வந்ததும் அனைவரும் வங்கிக் கணக்கை தொடங்குங்கள் என்று சொல்லி ஏமாற்றினார்கள். அதை அந்த மக்கள் நம்பினார்கள். ‘இது ஜூம்லா’ என்று இப்போது கூச்சமே இல்லாமல் சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. வளர்ச்சியின் நாயகனாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்ட மோடி, இந்தப் பத்தாண்டு காலத்தில் எதையும் வளர்க்கவில்லை. தன்னுடைய தனிமனித பிம்பத்தை வளர்த் திருக்கிறார். சொல்லிக் கொள்ள அவரிடம் எந்த சாதனையும் இல்லை. அவரால் சிதைக்கப்பட்ட பட்டியல்தான் அதிகம்.

மாநிலங்களைச் சிதைத்தார், இந்தியப் பொரு ளாதாரத்தைச் சிதைத்தார், இந்திய அமைதியைக் குலைத்தார். இப்படி சமூக அரசியல் பொரு ளாதாரத்தின் அனைத்துப் பக்கத்தையும் சிதைத்து விட்டார். இனி அவர் சிதைக்க ஏதுமில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் சிதைக்க நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்தத் தேர்தலில் வென்றால் அவர் செய்வதற்கு இது ஒன்றுதான் பாக்கி இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல.

கேள்வி: எப்போதும் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் “hero” என்று சொல்லப்படும். இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள எந்த அறிவிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக் கிறீர்கள்? நீங்கள் சொல்லியிருக்கும் வாக்குறுதிகள் எல்லாமே தேசிய அளவில் செயல்படுத்த வேண் டியவை. ஆனால் தி.மு.க. மாநில கட்சி என்கிற அடிப்படையில் அது எப்படி சாத்தியமாகும்?
பதில்: திமுகவை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி ஆட்சிதான் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போகிறது. எனவே நாங்கள் வைக்கும் வாக்குறுதிகள் தேசிய அளவிலான வாக்குறுதிகள்தான். மாநிலக் கட்சியான நாங்கள் கொடுத்த பல வாக்குறுதிகளை, ஒன்றியக் கூட்டணி அரசில் சேர்ந்து நிறைவேற்றிக் காட்டிய வரலாறு திமுகவுக்கு உண்டு. எனவே மாநிலக் கட்சியான திமுகவால் இது சாத்தியமா என அய்யப்படத் தேவையில்லை.
மாநில சுயாட்சியை மதிக்கும் கூட்டாட்சி அரசை உருவாக்குவோம், மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி அரசை உருவாக்குவோம், சமூக நீதியைப் போற்றுவோம், சமத்துவம் வளர்ப்போம், ஜனநாயகம் தழைத்தோங்க சளைக்காமல் உழைப்போம் – ஆகிய முழக்கங்களுடன் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. மாநில சுயாட்சியை மய்யமாகக் கொண்ட கூட்டாட்சி அரசு அமைந் தாலே அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். அதனை நிச்சயம் செயல்படுத்திக் காட்டுவோம்.

கேள்வி: பாரதீய ஜனதா கட்சிக்கும் அதி முகவுக்கும் கள்ளக்கூட்டணி என்று நீங்கள் விமர்சிப்பது எதன் அடிப்படையில்?
பதில்: ”நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வந்துவிடக் கூடாது’ என்று பழனிசாமியைச் சொல்லச் சொல்லுங்கள்!

Ad imageAd image
தொகுதி மறுவரையறை பிரச்சினையில் தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணி வகுக்கும்!
‘கேலோ இந்தியா’ திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை!
ரூ.290 கோடி மதிப்பில் அமையவுள்ள திருச்சி நூலகத்திற்கு காமராசர் பெயர்
பொதுமக்கள், காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 9ஆம் தேதி நடைபெறுகிறது
TAGGED:மு.க.ஸ்டாலின்முதலமைச்சர்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?