டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

1 Min Read

அரசியல்

புதுடில்லி, செப்.19 டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழாவை மாணவர்கள் சிறப்பாகக் கொண்டாடினர். 

பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் அமைப்பின் ஒருங் கிணைப்பில் ஜே.என்.யு. பேராசிரியர் அஜித் கன்னா, தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். வட இந்தியாவில் அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளுடன், தந்தை பெரியாரின் கருத்துகளும் இணையும் போது இந்திய மக்கள் அனைவருக்கும் அது மிகப்பெரிய நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சங்கத்தின் சுபாஷிணி, தமிழ்நாடு அரசின் சமூக நீதி நாள் உதியேற்பை முன்மொழிய, வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சமூகநீதி உறுதி யேற்பை ஏற்றுக் கொண்டனர் 

சிறப்புரையாற்றிய அஜித் கன்னா, ”ஜாதிகள் ஒழிய வேண்டும் ஏன்?” என்ற தந்தை பெரியாரின் நூலை ஆங் கிலத்தில் மொழி பெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *