இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட கழகத் தோழர்கள்

viduthalai
1 Min Read

கன்னியாகுமரி, ஏப். 11- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் க்கு ஆதரவாக நாகர்கோவில், ஒழுகினசேரி பகுதியில் திராவிடர்கழகத் தோழர் கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்தநிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். மாவட்ட கழக துணைத்தலைவர் ச. நல்ல பெருமாள் மாவட்ட பகுத் தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு , ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலர் பெரியார் தாஸ், மாவட்டகழக இளைஞ ரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், கழக மாவட்டத் துணைச் செய லாளர் சி.அய்சக் நியூட் டன் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க. யுவான்ஸ், மாவட்ட திரா விட மாணவர் கழக அமைப் பாளர் இரா.கோகுல், மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று திமுக அரசின் சாதனைகளையும், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியதன் நோக் கங்கள் அடங்கிய துண்ட றிக்கைகளை பொதுமக் களிடம் வழங்கினர்.

தெருத்தெருவாக பரப் புரையில் ஈடுபட்டனர். வரும் நாடாளுமன்ற தேர் தலில் மக்கள் விரோத பாசிச பா.ஜ.க ஆட்சிக்கு முடிவு கட்ட இந்தியா கூட்டணி கன்னியாகுமரி தொகுதி வெற்றி வேட் பாளர் விஜய் வசந்த் அவர் களுக்கு ஆதரவாக தொடர்ந்து மாவட்டம் முழுமையாக திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *