பா.ஜ.க.விலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் ஒன்றிய மேனாள் அமைச்சர்

viduthalai
1 Min Read

புதுடில்லி,ஏப்.10- அரியானாவை சேர்ந்த ஒன்றிய மேனாள் அமைச் சர் சவுத்ரி பீரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் (8.4.2024) அறிவித்தார். மேலும், தனது அரசியல் பய ணத்தை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தொடரப்போவதாக தெரிவித்திருந்தார். நேற்று (9.4.2024) புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச் சியில் சவுத்ரி பீரேந்தர் சிங் தனது மனைவியுடன் காங்கிரசில் இணைந்தார். காங்கிரசு கட்சியில் இணைந்த பீரேந்தர் சிங்குக்கும் அவரது மனைவிக்கும், அக்கட்சித் தலைவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
தனது அரசியல் வாழ்க்கையில் 40 ஆண்டு காலம் காங்கிரசு கட்சி யில் இருந்து பணியாற்றி வந்த அரியானாவை சேர்ந்த சவுத்ரி பீரேந்தர் சிங், கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவின் அப்போதைய தேசியத் தலைவர் அமித் ஷா முன்னி லையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் காங்கிரசில் அய்க்கியமாகியுள்ளார்.

பீரேந்தர் சிங்கின் மகனும், நாடா ளுமன்ற உறுப்பினருமான பிரிஜேந் தர் சிங் கடந்த மார்ச் 10-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மேற்கண்ட தலைவர்கள் இருவ ரும், நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தின்போது, அவர்க ளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங் களை எதிர்த்துக் குரல் கொடுத்தனர் என்பதும், தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதி ரான நிலைப்பாட்டை எடுத்து வந்த னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *