தி.மு.க. கூட்டணிக்கு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு ஆதரவு

viduthalai
4 Min Read

சென்னை, ஏப்.10 – தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.. விக்கிரமராஜா தலைமையில் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதகத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி உள்பட நிர்வாகிகளும், டீக்கடை உரிமையா ளர்கள் சங்கத்தின் செயலாளர் சுந்தரம். மருந்து வணிக சங்கத்தின் பொருளாளர் ரமேஷ் உள்படநிர்வாகிகள் நேற்று (8.4.2024) சந்தித்தனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக் கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்பு செயலாளர் எஸ்.ஆஸ்டின், தலைமை நிலைய செய லாளர் துறைமுகம் காஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தியா கூட்டணிக்கு பழ.நெடுமாறன் ஆதரவு

தஞ்சை, ஏப்.10- தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் 6.4.2024 அன்று நடைபெற்றது. அமைப்பின் நிறுவனத் தலை வரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.

அமைப்பின் மாநிலத் தலைவர் முத்தமிழ்மணி, பொதுச் செயலாளர்கள் தமிழ்மணி, பசுமலை, துணைத் தலைவர்கள் முருகேசன், பானுமதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் நம் நாட்டில் ஜனநாயகமே நிலவாது. பாசிச, சர்வாதிகார, இந்துத்துவா ஆட்சி நிலைநிறுத்தப்படும்.
சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவர். சம்ஸ்கிருத மொழியும், பண்பாடும் திணிக்கப்படும். மனித உரிமை கள் துச்சமாக மதிக்கப்பட்டு, தூக்கி எறியப்படும். எனவே, பாஜக கூட்டணியை அடியோடு முறியடிக்க, இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் – தேசிய மாநாடு கட்சி தொகுதி உடன்பாடு

சிறீநகர், ஏப்.10- ஜம்மு காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இதில் காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இண்டியா கூட்டணியில் உள்ளன.

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் 5 மக்களவைத் தொகுதி, லடாக்கின் ஒரு மக்களவைத் தொகுதி தொடர்பாக காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் உடன்பாடு எட்டப்பட்டு, இரு கட்சிகளும் தலா 3 தொகுதி களில் போட்டியிட முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து தேசிய மாநாடு தலைவர் ஓமர் அப்துல்லா டில்லியில் நேற்று (8.4.2024) கூறும்போது, அனந்தநாக், பாரமுல்லா, சிறீநகர் தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி போட்டியிடும். உதம்பூர், ஜம்மு, லடாக் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது, ஜம்மு-காஷ்மீர் மிகச் சிறிய பகுதி. மக்கள் ஜனநாயக கட்சி உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன் னேற்றம் ஏற்படவில்லை. எனினும் அந்த கட்சி இந்தியா கூட்டணியில் நீடிக்கிறது என்று தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் ஜம்மு காஷ்மீர் மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் – தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட இருந்த பணமா?
சென்னை தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க. பெண் நிர்வாகி வீட்டில் ரூ. 13 லட்சம் பறிமுதல்

சென்னை,ஏப்.10- தண்டையார்பேட்டை அதிமுக பெண் நிர்வாகி வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக் கான வாக்குப் பதிவுவரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுத்து, வாக்குகளை கவர்ந்து விடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தமிழ் நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், காசிமேட்டில் உள்ள வீடு ஒன்றில் தேர்தலுக்கு பணம் கொடுப்பதற்காக, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையக் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆர்.கே.நகர் பறக்கும்படை அதிகாரி செல்வ விநாயகம்,காவல் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான பறக்கும்படையினர் சென்னை தண் டையார்பேட்டை, புதிய அமராஞ்சிபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கட்டுக்கட்டாக ரூ.13 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. அதுகுறித்து வீட்டில் இருந்த உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பொற்கொடி (25), அவரது தாயார் தங்கம் (65), ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, பொற்கொடி, மீன்பிடிக்க கடலுக்கு செல்பவர் களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறேன்.

தற்போது மீன் பிடிக்க அதிகமான படகு போகாததால் ரூ.13 லட்சம் பணம் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந் ததாக கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பணத்துக்கான ஆவணம் இல்லாததால் அனைத்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பொற்கொடியின் தாயார் தங்கம் என்பவர் தண்டை யார்பேட்டையில் உள்ள அமராஞ்சிபுரம் பகுதி அதிமுக பொறுப்பாளராக உள்ளார் என பறக்கும் படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *