நச்சுப் பாம்பைக் கூட நம்பலாம்; ஆனால் பா.ஜ.க.வை நம்பக் கூடாது: மம்தா ஆவேசம்

viduthalai
1 Min Read

கொல்கத்தா, ஏப். 5- பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவ தில்லை என்று குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா, “விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால், பாஜகவை நம்ப முடியாது” என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா மாநிலத்தின் கூச் பெஹரில் நேற்று (4.4.2024) பிரச்சாரம் மேற்கொண்டு பேசியதாவது: “பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மீண்டும் பெயரினை பதிவு செய்யுமாறு பாஜக கேட்கிறது. ஏன் இப்போது பெயரைப் பதிவு செய்யவேண்டும்? அவர்கள் அதிகமான பதிவுகளை விரும்புகிறார்கள். அப்போதுதான் அதனை நிறுத்த முடியும். நீங்கள் ஒரு விஷப் பாம்பைக் கூட நம்பலாம். அதனைச் செல்லப் பிராணியாக வளர்க் கலாம். ஆனால், பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது. பாஜக நாட்டையே அழித்து வருகிறது.
ஒன்றிய புலனாய்வு அமைப்புகள், என்அய்ஏ, வருமான வரித் துறை, பிஎஸ்எஃப், சிஅய்எஸ்எஃப் போன்றவை பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு வருகின்றன. மத்திய அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், ஒரு சமமான களம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வேண்டு கோள் விடுக்கிறோம். பாஜக ‘ஒரே நாடு ஒரே கட்சி’ என்ற கொள்கையை பாஜக பின்பற்று கிறது” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பாஜகவை கடுமையாக தாக்கிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, கூச் பெஹரின் மேனாள் காவல் கண்காணிப் பாளர் தேபாஷிஸ் தார் பாஜகவின் பிர்ஹும் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப் பதை கடுமையாக விமர்சித்தார்.

“தேபாஷிஸ் தார் கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலின் போது 5 பேர் கொல்லப் படுவதற்கு காரணமாக இருந்தவர்” என்று அவர் சாடினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *