நேற்று (04.04.2024) தலைமைச் செயலகத்தில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள், சட்டம் ஒழுங்கு, செலவினங்கள் கண்காணிப்பு மற்றும் வாக்குப் பதிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, மற்றும் சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன், ஆகியோர் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் சங்கர் லால் குமாவத், இணை தலைமைத் தேர்தல் அலுவலர் எச்.எஸ் சிறீகாந்த் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மக்களவை பொதுத் தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் – சட்டம், ஒழுங்கு, செலவினங்கள் கண்காணிப்பு குறித்து ஆலோசனை
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:ஆலோசனை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
