இதுதான் பி.ஜே.பி. அரசின் சாதனை – இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் கைது!

Viduthalai
1 Min Read

ராமேசுவரம், ஏப்.4- இலங்கை நீதி மன்றத் தால் கடந்த மாதம் விடு தலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19பேர் மீது மீண் டும் கடந்த 1.4.2024 அன்று வழக்குப் பதியப் பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமே சுவரத்திலிருந்து கடந்த மாதம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 21 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறி முதல் செய்தனர். இதையடுத்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள்மீது வழக் குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து, ஊர்க்கா வல்துறை நீதிமன்றத்தில் 21 மீனவர் கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி முன்னிலைப்படுத்தப்பட்ட னர். இவர்களில் இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 19 மீன வர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், விடுதலை செய்யப் பட்ட 19 மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களின் படகுக ளைச் சேதப்படுத்தியதாகவும், அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் மீண்டும் 1.4.2024 அன்று வழக்குப் பதிந்து, மீனவர்களுக்கு ரூ. 3.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து மீனவர் களும் மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு ராமேசு வரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *