2.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015இல் நியாயம் என விளக்கியிருந்தார் ஜெய்சங்கர். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சரியே என்று 2015இல் கூறிய ஜெய்சங்கர் இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ வாக்கு இயந்திரத்தோடு, வாக்குச் சீட்டு (VVPAT) முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற மனு மீது பதில் அளிக்க மோடி அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ காவி கட்சிக்கு தென்னிந்தியா எப்போதும் எதிராகவே உள்ளது: கனிமொழி பேட்டி
♦பாஜகவில் சேர ரூ.25 கோடி தருவதாகக் கூறி அணுகிய தாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ரிதுராஜ் ஜா புகார்
தி இந்து:
♦ மக்களவைத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்கிறார் தி இந்து செய்தியாளர்.
♦ கடந்த ஒரு வாரமாக, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்)-இணைந்த குழு ஒன்று, குடியுரிமை (சட்டம், 2019 திருத்தம்) சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முகாம்களை ஏற்பாடு செய்து “தகுதிச் சான்றிதழ்களை” வழங்கி வருகிறது.
தி டெலிகிராப்:
♦ ரூ.3,500 கோடி வருமான வரி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் வழக்கில், பொதுத் தேர்தல் முடியும் வரை காங் கிரசுக்கு எதிராக எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஒன்றிய அரசிடம் இருந்து உச்ச நீதிமன்றம் உறுதிமொழியைப் பதிவு செய்தது.
♦ ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக பிரதமர் கூறுகிறார் ஆனால் ஊழலின் விநியோக உரிமையை அசாமில் இருந்து மகாராட்டிராவரை மோடி விநியோகிக்கிறார்” என்று மோடியின் ஊழலுக்கு எதிரான பெருமை குறித்து ராகுல் காந்தி தாக்கு.
♦ மேற்கு வங்கத்தில் டயமண்ட் ஹார்பர், ஜார்கிராம், அசன்சோல் மற்றும் பிர்பூம் ஆகிய 4 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. இந்த இடங்களில் அமலாக்கத் துறை, சி.பி.அய். இயக்குநர்களை வேட்பாளர்களாக பாஜக நிறுத்தலாம் என திர்னாமுல் காங்கிரஸ் அபிஷேக் கிண்டல்.
– குடந்தை கருணா