கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

2.4.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015இல் நியாயம் என விளக்கியிருந்தார் ஜெய்சங்கர். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சரியே என்று 2015இல் கூறிய ஜெய்சங்கர் இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ வாக்கு இயந்திரத்தோடு, வாக்குச் சீட்டு (VVPAT) முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற மனு மீது பதில் அளிக்க மோடி அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ காவி கட்சிக்கு தென்னிந்தியா எப்போதும் எதிராகவே உள்ளது: கனிமொழி பேட்டி
♦பாஜகவில் சேர ரூ.25 கோடி தருவதாகக் கூறி அணுகிய தாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ரிதுராஜ் ஜா புகார்
தி இந்து:
♦ மக்களவைத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்கிறார் தி இந்து செய்தியாளர்.
♦ கடந்த ஒரு வாரமாக, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்)-இணைந்த குழு ஒன்று, குடியுரிமை (சட்டம், 2019 திருத்தம்) சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முகாம்களை ஏற்பாடு செய்து “தகுதிச் சான்றிதழ்களை” வழங்கி வருகிறது.
தி டெலிகிராப்:
♦ ரூ.3,500 கோடி வருமான வரி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் வழக்கில், பொதுத் தேர்தல் முடியும் வரை காங் கிரசுக்கு எதிராக எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஒன்றிய அரசிடம் இருந்து உச்ச நீதிமன்றம் உறுதிமொழியைப் பதிவு செய்தது.
♦ ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக பிரதமர் கூறுகிறார் ஆனால் ஊழலின் விநியோக உரிமையை அசாமில் இருந்து மகாராட்டிராவரை மோடி விநியோகிக்கிறார்” என்று மோடியின் ஊழலுக்கு எதிரான பெருமை குறித்து ராகுல் காந்தி தாக்கு.
♦ மேற்கு வங்கத்தில் டயமண்ட் ஹார்பர், ஜார்கிராம், அசன்சோல் மற்றும் பிர்பூம் ஆகிய 4 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. இந்த இடங்களில் அமலாக்கத் துறை, சி.பி.அய். இயக்குநர்களை வேட்பாளர்களாக பாஜக நிறுத்தலாம் என திர்னாமுல் காங்கிரஸ் அபிஷேக் கிண்டல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *