புதுடில்லி, ஏப்.2- கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுப டுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாக வும், இதன் மூலம் ‘காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது’ என்பது மீண்டும் நிரூபண மாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார். இது தொடர் பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “1974- ஆம் ஆண்டு நட்புறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங் கப்பட்டது. 2015-இல் எல்லைப் பகுதி களுக்கு ஈடாக வங்காளதேசத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை உங்கள் (பிரதமர் மோடி) அரசு மேற்கொண்டதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
இந்த பிரச்சினையை தீர்த்து கச்சத் தீவை மீட்பதற்கு 10 ஆண்டுகால ஆட்சி யில் உங்கள் அரசாங்கம் ஏதாவது நடவ டிக்கை எடுத்ததா என்று நீங்கள் சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.