கேள்வி: சமீபத்தில் வெளியாகியுள்ள தேர்தல் பத்திர விவரங்களால், பா.ஜ.க.வுக்குக் கெட்ட பெயர் வந்துள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பிரதமர் மோடி பதில்: எனக்குப் பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் – என்று கொஞ்சம் சொல்லுங்கள்.
இன்று மோடி தேர்தல் பத்திரங்களை உருவாக்கி யுள்ளார். அதனால்தான் உங்களால் அதைப்பற்றித் தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது; யார் வாங்கினார்கள் என்பதை எல்லாம் உங்களால் அறிய முடியும். இல்லையென்றால், யாருக்குப் பணம், எங்கிருந்து வந்தது எனத் தெரியாது.
– ‘தினத்தந்தி’, 1.4.2024, பக்கம் 3
நமது பதிலடி: ‘‘அந்த வீட்டில் ஏன் திருடினாய்” என்று காவல்துறை கேட்டால், நான் திருடியதால் தானே அந்த வீட்டில் என்னென்ன நகைகள் இருந் தன என்பது தெரிய வந்தது என்று சொன்னால், எப்படி இருக்கும் – அதைப் போல் அல்லவா இருக்கிறது மோடிஜியின் பதில்.
தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று கேட்டால், ‘‘புல் பிடுங்க” என்று பதில் சொன்னாராம் – இதையும் மோடியின் பதிலில் சேர்த்துக் கொள்ள லாம்.