கல்வியாளர் – எழுத்தாளர் சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் நீலன் மறைந்தாரே!

1 Min Read

‘விடுதலை’ ஏட்டின் மேனாள் துணை ஆசிரியரும், கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவரும், சிறந்த நூல்களை எழுதியவரும், சுயமரியாதை வீரருமான ‘நீடாமங்கலம் மானமிகு நீலன் (வயது 88) நேற்றிரவு (1.4.2024) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
சமீபத்தில்தான் அவருடைய 60ஆம் ஆண்டு மணவிழாவில் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தோம். அதற்குள் இந்த முடிவு ஏற்பட்டு விட்டதே! அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது வாழ்விணையருக்கும், அருமைச் செல்வங்களுக்கும், அவர் நடத்தி வரும் கல்விக் குழும பணியாளர் களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
2.4.2024
குறிப்பு: நாளை (3.4.2.024 )மாலை 5 மணிக்கு நீடாமங்கலத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *