குரூப்-1 அதிகாரிகளுக்கு அய்.ஏ.எஸ். தகுதி : தமிழ்நாடு அரசு ஆணை

1 Min Read

சென்னை, ஏப்.2– தமிழ்நாடு அர சில் பணியாற்றும் குரூப்-1 அதிகா ரிகள் 7பேருக்கு அய்.ஏ.எஸ். அதி காரிகளாக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. மாநிலத்தில் அய்.ஏ.எஸ். அதி காரிகள் காலி பணியிடங்களை பொறுத்து அந்த இடத்தை குரூப்-1 அதிகாரிகள் மூலம் ஒன்றிய அரசு நிரப்புவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு அரசில் உள்ள காலி பணியிடங்களில் 7 குரூப்-1 அதி காரிகளை அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். அதன்படி கலை மற்றும் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் சிவசுந்தரவள்ளி, சிவகங்கை மாவட்ட வருவாய் அதி காரி மோகன சந்திரன், தமிழ்நாடு பொது வினியோக பொது மேலாளர் (மார்க் கெட்டிங்) சதீஷ், மாநில விருந்தினர் மாளிகை தலைமை அதி காரி கந்தசாமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சுகுமார், தமிழ்நாடு நகர்ப் புற குடிய மைப்பு மேம்பாட்டு வாரியத் தின் செயலாளர் துர்கா மூர்த்தி, கலை ஞர் மகளிர் உரிமை தொகை திட்டத் தின் துணை இயக்குநர் பொற்கொடி ஆகியோர் அய்.ஏ.எஸ். அதிகாரிக ளாக தகுதி உயர்வு வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *