6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாத பிரதமர் மோடி! : உளவுத்துறை அதிர்ச்சித் தகவல்

viduthalai
4 Min Read

புதுடில்லி, ஏப்.1 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற் கான பிரச்சாரம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த 6 நாட்களாக எங்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லா தது பேசுபொருளாகியுள்ளது. மூன் றாவது முறை ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கும் பிரதமர் மோடி, ஏன் 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை? என்ற கேள்விக்கு பின்னணியில் உள வுத்துறை ரிப்போர்ட் இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரம்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தென்மாநிலங்களில் எடுக்கப்பட்ட ‘சர்வேயில்’ பாஜக பெரும் பின்ன டைவை சந்திக்கும் என உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. அதேநேரத்தில் வடமாநிலங்களில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என உளவுத்துறை சொல்ல, உற்சாகத்தில் இருந்த மோடிக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த தேர்தல் பத்திர தீர்ப்பு பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. அதாவது, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் வாங்கியதை வெளிப்படையாக தெரிவிக்க வேண் டும் என எஸ்பிஅய்க்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட, அதில் பெரும் பாலான பணம் பாஜகவுக்கு சென் றது வெட்டவெளிச்சமானது.

இதனால் ஊழல் குறித்த பிரச் சாரத்தை முன்னெடுக்க முடியாமல் அப்படியே கப்சிப் மோடுக்கு சென்று விட்டது பாஜக. வாரிசு அரசியலை பற்றி பேசலாம் என்றாலும் பாஜக வில் போட்டியிடும் வேட்பாளர் களிலும் பெரும்பாலானவர்கள் குடும்ப அரசியல் பின்னணியை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதால் அந்த பிரச்சாரத்தையும் தீவிரமாக முன்னெடுக்க முடிய வில்லை. வட மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம், சமையல் எரிவாயு விலை உயர்வு சமானிய மக் களை கடுமையாக பாதித்திருப்பதால் அவர்கள் ஒன்றிய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை உளவுத்துறை ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. இதனை எப்படி சரிகட்டுவது என பாஜக மேலிடம் யோசித்துக் கொண்டிருக் கும் போது, உளவுத் துறையின் இறுதி அறிக்கையிலும் முன்பு கொடுக்கப்பட்ட வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகள் எல்லாம் வெகுவாக குறைந்திருக்கிறது.
இதனால் கடும் குழப்பத்தில் மோடி மற்றும் பாஜக மேலிட தலைவர்கள் இருக்கிறார்களாம். அதனால் தான் கடந்த 6 நாட்களாக எங்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி செல்லவில்லை. போதாக் குறைக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிர்மலா சீதா ராமன் உள்ளிட்ட மூத்த தலைவர் களே தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியது கள எதார்த்ததை உணர்த்திவிட்டதாம். முக்கிய தலை வர்கள் பலர் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியதால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாஜக மேலிடம் தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சேலம் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூட ஒன் றிய அரசின் உளவுத்துறை கொடுத்த ‘ரிப்போர்ட்’ குறித்து சூசகமாக தெரிவித்தார். அந்த ரிப்போர்டில் தோல்விக்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டதாலேயே மோடி பதற்றத்தில் இருக்கிறார் என அவர் விமர்சித்தார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய வற்றின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியி ருக்கிறது என்பதையும் மோடிக்கு உளவுத்துறை சொல்லிவிட்டதாம். இருப்பினும் எப்படியாவது எதிர்க் கட்சிகளை முடக்கி இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என நினைக்கும் நரேந்திர மோடி, அனைத்து ஆயுதங்களையும் கையில் எடுக்க தயாராகவே இருக்கிறாராம்.

ஆனால், வடமாநிலங்களில் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் செல்வதும், கூட்டம் கூடுவதும் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருக்கிறது. இதனால், 400 தொகுதிகளை கைப் பற்றி பிரம்மாண்டமாக ஆட்சி அமைப்போம் என பேசி வந்த பாஜகவினர் அப்படியே ‘கப்சிப்’ ‘மோடு’க்கு சென்றுவிட்டனர். இப் போதைக்கு தென்மாநிலங்களைக் காட்டிலும் வட மாநிலங்களில் எப்படி வெற்றி பெறுவது என்ப தற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக. 2014இல் கருப்பு பண மீட்பு பற்றி பேசிய பிரதமர் மோடி, இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதுபற்றி இன்னும் வாயே திறக்கவில்லை. பண மதிப்பிழப்பு குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அது ஒரு மோசமான நடவடிக்கை என விமர் சித்திருப்பதுடன் 98 விழுக்காடு பணம் மீண்டும் வங்கிக்கே வந்துவிட்ட நிலையில், எந்த கருப்பு பணத்தை ஒன்றிய அரசு மீட்டிருக்கிறது, ஒழித்திருக்கிறது? என கேள்வி எழுப்பியிருக்கிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்பு பணத்தை வெள் ளையாக்கவே பயன்பட்டிருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது சாமானிய மக்களை யும் வெகுவாக சென்றடைந்துள்ளது. இதனால், உச்சகட்ட பதற்றத்தில் இருக்கும் பாஜக, என்ன செய்வது என தெரியாமல்? என்ன தேர்தல் வாக்குறுதி கொடுக்கலாம்? என்பது புரியாமல் குழப்பத்தில் இருக்கிறது. இத்தனை பிரச்சினைகள் இருக்கும் போதும், காங்கிரஸ் அடித்து ஆட வேண்டிய அரசியல் களத்தை இன் னும் சரியாக பயன்படுத்தத் தொடங்கவில்லை என்ற விமர் சனமும் எழுந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *