நெய்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் தேர்தல் பரப்புரை வேட்பாளர் அறிமுக கூட்டம்

1 Min Read

காடாம்புலியூர், ஏப். 1- நெய்வேலி சட்ட மன்ற தொகுதி தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி காடாம்புலியூரில் திரு மண மண்டபத்தில் 29.3.2024 காலை 11 மணி அளவில் சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தேர்தலில் நமது கடமை என் பது குறித்தும் இந்தியா கூட்டணி யின் வலிமை பற்றியும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்
சி.வே.கணேசன் பேசினார்.

வேட்பா ளர் டாக்டர் விஷ்ணு பிரசாத், கழக பொதுச்செயலாளர் முனை வர் துரை சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட பொறுப் பாளர் அறிவுடை நம்பி மற்றும் தோழமைக் கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் மாவட்ட அமைப்பா ளர் மணிவேல், மாவட்ட இளைஞ ரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட இணை செயலாளர்
பஞ்சமூர்த்தி, ஒன்றிய அமைப் பாளர் சேகர், மோகன், நூலகர் கண்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *