அய்தராபாத், ஏப்.1- ஆளுநர்கள் அரசமைப்பு சட்டப்படி செயல்பட வேண் டும் என உச்ச உச்ச நீதிமன்ற நீதிபதி
பி.வி. நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு கடந்த 2016-ஆம் 5 ஆண்டு கொண்டுவந்த பணம திப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகதொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 4:1 என்ற பெரும்பான்மையில் ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியே என்று அர சியல் சாசன அமர்வு தீர்ப்ப ளித்து. நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்ட விரோதமானது என தீர்ப்பளித்தார். இந்த நிலையில் தெலங்கானா தலைநகர் அய்தராபாத் தில்உள்ள சட்டப்பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நீதிபதி பி.வி.நாகரத்னா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பணமதிப் பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக் கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கியது
2016-ஆம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு களில் 86 சதவிகித நோட்டுகள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 2016-இல் அவசர அவசரமாக செய்யப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்கு கூடத் தெரியாது என்கிறார்கள் சிலர். புழக்கத்தில் இருந்த நோட்டு – களில் 86 சதவீதம் செல் லாது என ஒன்றிய அரசு அறிவித்தது – கண்மூடித்தனமானது. புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 நோட்டுகளில் 98,சதவீதம் திரும்ப வந்துவிட்டதால் அதன் பிறகான வருமானவரி நடவ டிக்கைகள் என்ன ஆனது என்றே தெரிய வில்லை. மேலும் கருப்புப் பணத்தை – வெள்ளைப் பணமாக மாற்ற பணமதிப் பிழப்பு, ஒரு நல்ல வழி என்று முன்பு நானும் நினைத்திருந்தேன்; ஆனால் அது செயல்படுத்தப்பட்ட பிறகு அந்த நோக்கம் என்ன ஆனது என்பதே தெரிய வில்லை.
பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கி யதால் அதுதொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தந்தேன். இவ்வாறு நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் களின் ஆளுநர்கள் அம்மாநில அரசு களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவைத்துள்ளது குறித்து விமர் சித்தார்.
இதுப்பற்றி அவர் பேசுகையில், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாலும், அவர்களின் பிறநடவடிக் கைகளினாலும், உச்ச நீதிமன்ற வழக்கு களில் ஆளுநர்கள் முக்கிய பேசு பொரு ளாக இருக்கின்றனர். அரசமைப்பின்படி, இது ஆரோக் கியமான போக்கு அல்ல. ஆளுநர் பதவி என்பது முக்கியமான அரசமைப்பு பதவியாகும். ஆளுநர் அரச மைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு நடக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்தின்படி செயல்பட்டால்தான் இப்படியான வழக்குகள் குறையும்” என்றார்.