ஒன்றிய விசாரணை அமைப்புகள்மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

1 Min Read

புதுடில்லி,மார்ச்.31- ஒன்றிய விசா ரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படு வதாக 1ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் முறையிட திரிணாமுல் காங்கி ரசுக்கு நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநில முதல மைச்சர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழு டில்லியில் தேர்தல் ஆணையம் அலுவலகத்துக்கு சென்றது.
அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டெரிக் ஓ பிரையன், மேற்கு வங்காள அமைச்சர் சசி பாஞ்சா, நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென்.சாகேத் கோகலே, சகாரிகா கோஸ் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர்.

தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க ஏப்ரல் 1-ஆம் தேதி நேரம் ஒதுக்கீடு பெற்றனர்.” பின்னர், வெளியே வந்து மேற்கு வங்காள அமைச்சர் சசி பாசா செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு ஜார்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம் கட் டுப்பாட்டில் அதிகாரிகள் வந்துள் ளனர். அதன்பிறகு டில்லி -முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது களால் நாங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளோம்.

ஒன்றிய விசாரணை அமைப் புகள், எதிர்க்கட்சிகளை வேட்டை யாட தவறாக பயன்படுத்தப்படு கின்றன. மேற்கு வங்காளத்தில் திரி ணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும் ‘அழைப்பாணை’ அனுப் பப்படுகிறது. இதனால் தேர்தல் பிர சாரப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் ஆணையம் தலையிட்டு தனது அதிகா ரங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

இதுதொடர்பான எங்கள் கவலை களை முறையிட தேர்தல் ஆணையத் திடம் நேரம் கேட்டோம். ஏப்ரல் 1ஆம் தேதி. தலைமை தேர்தல் ஆணை யர் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *