ஏப்ரல் 19 முதல் ஜூன் முதல் தேதி வரை தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை தேர்தல் ஆணையம் ஆணை

viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 31- நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட் டங்களாக நடக்கிறது. மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலும் இந்த தேர்தலு டன் நடக்கிறது.

இதைப்போல 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.
இந்த நாட்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத் துக்கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
குறிப்பாக முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை இந்த கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல வாக் குப் பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத் தில் கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர் தல் ஆய்வுகள் தொடர் பான எந்த தகவல்களை யும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *