முதுநிலை மருத்துவப் படிப்பு ஒன்றிய அரசின் வஞ்சக செயலுக்கு இரா.முத்தரசன் கண்டனம்

2 Min Read

அரசியல்

சென்னை,செப்.23- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதுநிலை மருத் துவப் படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப் படையாக இருக்காது. அது ‘பூஜ்யமாக’ கருதப்படும் என்று மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

இதனால் பொது மருத் துவம், அறுவை சிகிச்சை உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு பயில ‘நீட்’ மதிப்பெண் அவசியமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக் கிறது. இதன் மூலம் ஒன்றிய அரசின் ‘தகுதி’ மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க் கைக்கு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் கட்டாயம் என நிர்பந்தப் படுத்தி பிற்படுத்தப்பட்ட, மிக வும் பிற்படுத்தப்பட்ட, பட்டி யல் ஜாதியினர், பழங்குடியினர் சமூக பிரிவுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மழைக்கால புற்றீசல்கள் போல் தோன்றியுள்ள ‘நீட்’ பயிற்சி மய்யங்கள் மூலம் பணம் பறிக்கும் சமூக கொள் ளைக்கு ஆதரவு காட்டி வரும் பாஜக ஒன்றிய அரசு – ‘தகுதி’, ‘திறன்’ என்ற பெயரில் அடித்தட்டு மக்களுக்கு சமூக அநீதி இழைத்து வருகிறது. இந்த சமூக அநீதி களையப்பட ‘நீட்’ தேர்வில் இருந்து ‘விதி விலக்கு’ கேட்டு தமிழ்நாடு முனைப்புடன் போராடி வருகிறது.

இந்த நிலையில் இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு மூலம் வடிகட்டி, அடித் தட்டு மக்களின் மருத்துவக் கல்வி உரிமையை மறுத்து விட்டு, முதுநிலை படிப்பில் உயர் ஜாதி பிரிவினர் தடையின்றி நுழைய கதவு திறந்து விடும் வஞ்சக செயலாகவே ஒன்றிய அரசின் செயல் அமைந்திருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த பாரபட்ச செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், ‘நீட்’ தேர்வு முறையை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும், குறைந்த பட்சம் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

-இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *