பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் பாரீர்!

Viduthalai
1 Min Read

உத்தரப்பிரதேசத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடிய நான்கு பேர்மீது காவல்துறையினர் வழக்காம்!

லக்னோ, செப்.23 உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடிய நான்கு பேர்மீது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

விசுவ ஹிந்து பரிஷத் அளித்த புகாரின் பேரில் மேற்கண்ட நான்கு பேர்மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 17 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் குராரா என்ற இடத்தில், தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அன்று பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடிய அமர்சிங், சுரேஷ், அவதேஷ், அசோக் வித்யார்த்தி ஆகிய நான்கு பேர்மீதும் காவல்துறையினர், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை குறித்துப் பேசியதாக  வழக்குப் பதிவு செய்துள்ளனராம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *