பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் பாரீர்!

1 Min Read

உத்தரப்பிரதேசத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடிய நான்கு பேர்மீது காவல்துறையினர் வழக்காம்!

லக்னோ, செப்.23 உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடிய நான்கு பேர்மீது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

விசுவ ஹிந்து பரிஷத் அளித்த புகாரின் பேரில் மேற்கண்ட நான்கு பேர்மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 17 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் குராரா என்ற இடத்தில், தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அன்று பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடிய அமர்சிங், சுரேஷ், அவதேஷ், அசோக் வித்யார்த்தி ஆகிய நான்கு பேர்மீதும் காவல்துறையினர், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை குறித்துப் பேசியதாக  வழக்குப் பதிவு செய்துள்ளனராம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *