கொல்கத்தா, மார்ச் 29- மேற்கு வங்காள மாநில பா.ஜனதா மேனாள் தலைவரும், மேதினிபூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ், வருகிற தேர்தலில் பர்தமான் – துர்காபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் முதலமைச்சர் மம்தாவின் பிறப்பு குறித்து தரக்குறைவாக பேசும் காட்சிப்பதிவு ஒன்று வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் திரிணா முல் காங்கிரசார் புகார் அளித்து உள்ளனர்.
மேலும் அவரிடம் கட்சித்தலைமையும் விளக்கம் கேட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தனது சர்ச்சை கருத்துக்காக திலிப் கோஷ் 27.3.2024 அன்று மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது வார்த்தைகளுக்காக எனது கட்சியினருக்கும், மற்றவர்களுக்கும் சங்கடம் ஏற் பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கி றேன். முதலமைச்சர்மீது எனக்கு தனிப்பட்ட முறையில் பகை எதுவும் இல்லை’ எனவும் தெரிவித்துள்ளார்
மன்னிப்பு கோரிய பா.ஜ.க. எம்.பி.
Leave a Comment