திருவனந்தபுரம், மார்ச் 28- கோவில் திருவிழாவில் தேர் சக்க ரத்தில் சிக்கி 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சவரா கொற்றம் குளங்கரைதேவி கோவிலில் நடை பெற்ற சமய விளக்கு திருவிழாவில் ஆண்களும், பெண்களும் விதவிதமான வேடமிட்டு கலந்து கொண்டனர்.
சமய விளக்கு திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. 24.3.2024 அன்று நள்ளிரவு தேர் பவனி நடை பெற்றது. அப்போது கோவில் வளாகத் தில் பக்தர்கள் கூட்டமாகக் கூடினர். இதில் கொல்லம் சவரா பகுதியை சேர்ந்த ரமேசன் தன்னுடைய மகள் சேத்ராவுடன் (வயது 5) பங்கேற்றார்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த சமயத்தில் ரமேசன், சேத்ராவை தேரின் அருகில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கூட்ட நெரிசலால் கீழே விழுந்த சேத்ரா தேரின் சக்கரத்தில் சிக் கினார்.
இதில் அந்த சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கருநாகப் பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மறுநாள் (25.3.2024) காலையில் சேத்ரா பரி தாபமாக இறந்தார்.
இதுதான் கடவுள் சக்தியோ! கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி பரிதாபமாக பலி
Leave a Comment