தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வித் திட்டம் 25 சதவீத மாணவர்கள் சேர்ப்பு : ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் விண்ணப்பம்

2 Min Read

சென்னை, மார்ச் 28- கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 3-ஆவது வாரத்தில் தொடங்க உள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி, தனி யார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்களில், வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல் லது 1ஆம் வகுப்பில் சேர்பவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணமின்றி இலவசமாக படிக்கலாம்.

தமிழ்நாட்டில் 2013இல் அம லான இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 4.60 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்று படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்ட ணமாக தமிழ்நாடு அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் சராசரியாக ரூ.370 கோடி வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டில் (2024_-2025) இலவச மாணவர் சேர்க்கைக்கான விண் ணப்ப பதிவு ஏப்ரல் 3-ஆவது வாரத் தில் தொடங்க உள்ளதாக கூறப் படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறு பான்மை பள்ளிகள் தவிர்த்து, மற்ற அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், அய்சிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாக மாணவர் சேர்க்கை பெற முடி யும்.
வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.

வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்அய்வி யால் பாதிக்கப்பட்டவர், 3ஆம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளி கள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோரது குழந்தைகளின் விண் ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வருமா னம், இருப்பிடம், ஜாதிச் சான் றிதழ்களை சமர்ப்பிப்பது அவ சியம். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன் கூட்டியே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *