அந்தோ,பரிதாபம் பிஜேபி! இமாசலப் பிரதேச இடைத்தேர்தலில் கட்சி மாறியவர்களை களம் இறக்கியது

viduthalai
2 Min Read

புதுடில்லி, மார்ச் 28- இமாசல பிரதேசத்தில் நடைபெறும் சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை பா. ஜனதா அறிவித்தது. காங்கிரசில் இருந்து விலகி தங்கள் கட்சியில் சேர்ந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்

இமாசலபிரதேச மாநிலத் தில் கடந்த மாதம் 27ஆம் தேதி மாநி லத்தின் ஒரே ஒரு மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் 6 பேர் எதிர்க்கட்சியான பா.ஜனதா வேட் பாளருக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிப் பெற செய்த னர்.
இதன் எதிரொலியாக அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரையும் காங்கிரஸ் கட்சி தகுதி நீக்கம் செய்தது. இதனால் அந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும். நாடாளுமன்ற தேர்தலுடன் வரு கிற ஜூன் 1ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற வுள்ளது.
இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் 6 பேரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தனர்.

பா.ஜனதா வேட்பாளர்களாக நிறுத்தம்

இந்த நிலையில் இமாசலப் பிரதேசத்தின் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பா.ஜனதா அறிவித்தது. காங்கிர சால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பா.ஜனதாவில் இணைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட் டுள்ளது.
அவர்கள் எந்தெந்த தொகுதி களில் காங்கிரஸ் சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டனரோ அதே தொகுதி களில் பாஜனதா வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

குஜராத் இடைத்தேர்தல்

இதேபோல் குஜராத் மாநிலத் தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் வருகிற மே 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அந்த 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் களை பா.ஜனதா நேற்று அறிவித்தது. இவர்களில் 4பேர் சமீபத் தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *