ஒருங்கிணைந்த மருத்துவ சேவைக்கான புத்தாக்க சிகிச்சை மருத்துவக் கிளை திறப்பு

1 Min Read

சென்னை, மார்ச் 28- சென்னையில் உள்ள புகழ் பெற்ற டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை, ஓ.எம்.ஆரில் சிறுசேரி அருகே அதன் பிரமாண்ட கிளையை திறந்துள்ளது.
இது “ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறை மூலம் நோய் தடுப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை, மறுவாழ்வு ஆகியவற்றின் மூலம் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை இம்மருத்துவமனை உறுதிப்படுத்தும்.

இதுகுறித்து இம்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன் புதிய கிளை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், “அனைத்தையும் உள்ளடக்கிய, பரிவானதொரு சூழலை வளர்ப்பதில் எங்கள் மருத்துவமனை உறுதி பூண்டுள்ளது.

இதயவியல், எலும்பு, மகப்பேறு – பெண் நோயியல், குழந்தை மருத்துவம், ஈ.என்.டி., கருவுறுதல் சிகிச்சை, மனநலம், நரம்பியல், புற்று நோயியல், தடுப்பு மருத்துவம், சிறுநீரகம், இரைப்பைக் குடல் மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம், பல்வேறு மேம்பட்ட சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை இம்மருத்துவ மனையின் புதிய கிளையில் பெற முடியும் என அவர்
தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *