ஊழல் செய்வதற்காகவே சட்டங்களை திருத்திய பா.ஜ.க. ஆரணி பொதுக்கூட்டத்தில் சி.பி.எம். இராமகிருஷ்ணன் சாடல்

viduthalai
4 Min Read

திருவண்ணாமலை, மார்ச் 28- ஊழல் செய்வதற்காகவே ஒன்றிய பாஜக அரசு சட்டங்களை திருத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகே, ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தனை ஆத ரித்து சிபிஎம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது வருமாறு:

கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஊழலை ஒழிப்போம் என்ற பிரச்சாரத்துடன் ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர உலக மகா ஊழலில் அம்பலப்பட்டு நிற் கிறது. சட்டப்படியான தேர்தல் பத்திர ஊழலில் ரூ.16,496 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கு மேல் பாஜகவுக்கு சென்றுள்ளது.
வருமான வரி சட்டம், கம்பெனி சட்டம், தேர்தல் சட்டம், வெளி நாட்டு நிதி பராமரிப்பு சட்டம், ரிசர்வ் பேங்க் சட்டம் ஆகியவற்றை இந்த ஊழலுக்காக பாஜக அரசு திருத்தம் செய்துள்ளது.

உலக மகா ஊழலில் சிக்கிய பாஜக, எதிர்கட்சி தலைவர்களை கைது செய்வதன் மூலமும், வங்கி கணக்கை முடக்குவதன் மூலமும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரச்சாரத்தை முடக்க நினைக்கிறது. மாநில அரசுகளை கவிழ்க்க…
தேர்தல் பத்திர ஊழல் பணத்தை வைத்து பல மாநிலங்களில், பாஜக அல்லாத பல மாநில அரசுகளை கவிழ்த்துள்ளது. பல சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். மத்தியப் பிர தேசம், மஹாராட்டிரா, கருநாடகா, கோவா, மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம், புதுச் சேரி, உத்தரகாண்ட் ஆகிய பாஜக அல்லாத மாநில அரசுகளை கவிழ்த்தது.
182 எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கியது. தேர்தல் நிதி பத்திர திட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததோடு இது குறித்த விவரங்களை எஸ்பிஅய் வெளியிட வேண்டுமென தீர்ப்பு வழங்கியது. ஆனால் எஸ்பிஅய் வெளியிடவில்லை. 2024 நாடாளு மன்ற தேர்தல் முடியும் வரை இந்த விவரத்தை வெளியிடக்கூடாது என்பது பாஜக வின் திட்டமாக இருந்தது.

மறைக்க முயற்சி: தேர்தல் நிதி விவரத்தை வெளியிட மறுக்கும் எஸ்பிஅய் மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரே நாளில் தேர்தல் பத்திர கணக்குகளில் பாதியை மட்டும் வெளியிட்டுள்ளனர். மீண்டும் முழு விவரங்களை அளிக்க மனு அளிக்கப் பட்டது. உச்ச நீதிமன்றத்தின் கடு மையான உத்தரவுக்கு பிறகு, பட்டி யலை முழுவதும் சமர்ப்பித்துள்ள னர். 38 கார்ப்பரேட் கம்பெனிகள் தேர்தல் நிதி பத்திரம் மூலம் பாஜக வுக்கு நிதி வழங்கி ரூ.3.8 லட்சம் கோடி அளவுக்கான 179 திட்டப் பணிகளை அரசு ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி தலைமையிலான டில்லி மாநில அரசு அமைச்சர்கள் மீது மதுபான ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அமலாக்கத்துறை துணை முதலமைச்சரான சிசோடியா உள்ளிட்ட அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஓராண்டுக்கு மேல் சிறையில் உள் ளார். தற்போது முதலமைச்சர் அர விந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்.

மதுபான ஊழல் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கு பணப் பரிமாற்றம் சம்பந்தமாக இதுவரையில் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், மதுபான ஊழல் பிரச்சினை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அரபிந்தோ நிறுவன இயக்குநர் சரத் சந்திரரெட்டி அப்ரூவராக மாறுகிறார். அவரை அமலாக்கத்துறை பிணையில் வெளிவர உதவி செய்தது. அவர் பிணையில் விடுதலையான பிறகு ரூ.59 கோடி பாஜகவுக்கு தேர்தல் நிதி பத்திரம் மூலம் வழங்கியிருக் கிறார். சரத் சந்திர ரெட்டியை பிணையில் வெளிவர உதவியதற்கு கைமாறாக நிதி பத்திரம் திட்டம் மூலம் பாஜகவுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது. நிரூபணமாகி யுள்ளது. இதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட வேண்டி யவர்கள் நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தான். அவர்களை கைது செய்ய வேண்டுமென ஆம் ஆத்மி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் 11 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

1994ஆம் ஆண்டு சீத்தராம் கேசரி பொருளாளராக இருந்த போது சரியாக கணக்கு சமர்ப்பிக்க வில்லை என்ற பொய் காரணத் திற்காக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி காங்கிரஸ் பிரச்சாரத்தை தடுத்து விடலாம் என பாஜக தலைமை கருதியது. ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்துள்ளது நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிராக கடுமையான அதிருப்தியை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் பாஜக தோல்வியடையவது உறுதி படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தன், மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன். ப.செல்வன், எம்.பிரகலாதன், ந.சேகரன், அ. லட்சுமணன், ச.ராமதாஸ், இரா.பாரி, க.வாசுகி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக மாவட்ட குழு உறுப்பினர் சிவாஜி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *