ஒசூரில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஆதரவு திரட்டினார்

viduthalai
1 Min Read

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனிடம் இயக்க வெளியீட்டை வழங்கி கழகப்பொறுப்பாளர்கள் வரவேற்பு
அரியலூர், மார்ச் 28- சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட் பாளர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட குன்னம் சட்டமன்றத் தொகுதி, அரியலூர் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி உள் ளிட்ட தொகுதிகளில் குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் “இந்தியா” கூட்டணி கட்சியினரை சந்தித்து பய னாடை போர்த்தி சிறப்பு செய்து ஆதரவு திரட்டினார்.

26.3.2024 செவ்வாய் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத் துறை அமைச் சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்ட மன்ற உறுப்பினர்கள் கு..சின் னப்பா, க.சொ.க.கண்ணன், திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், பொதுக் குழு உறுப்பினர் சி. காமராஜ்,மாவட்ட இளைஞரணி தலை வர் க.கார்த்திக், மாவட்ட இ.அ. அமைப்பாளர் க.செந்தில், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, ஒன் றிய பொறுப்பாளர்கள் இரா.தமிழரசன், தியாக. முருகன், துரை. பிரபாகரன்,
சி.சிவக்கொழுந்து, சிந்தாமணி இராமச்சந்தி ரன், குழுமூர் சுப்பராயன், ஆட்டோ தர்மா, குன்னத்தில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலா ளர் மு. விஜயேந்திரன் உள் ளிட்டநிர்வாகிகள் வேட்பாளர் எழுச்சித் தமிழர் தொல் திருமா வளவனுக்கு ஆடை போர்த்தியும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப் போம்” என்றநூல் வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முன்னதாக 25.3.2024 அன்று மாலை அரியலூரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல்வீரர் கள் கூட்டத்திலும் தோழர்கள் மாவட்ட இணைச் செயலாளர் இரத்தின. இராமச்சந்திரன் தலைமையில் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *